Pages

Saturday, October 31, 2009

தமிழர்களை விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும்.

1987ம் ஆண்டு சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், இந்திப்பிரதமர் ராஜீவ்காந்திக்கு வழங்கப்பட்ட இராணுவ அணிவகுப்பில் வைத்து , விஜேமுனி எனும் சிங்கள இராணுவச் சிப்பாய் துப்பாக்கிக் கட்டையால் தாக்குகின்றார்.

கைது செய்யபபட்ட அவர் வழக்கில், சூரிய ஒளித் தாக்கத்தினால் ஏற்பட்ட மனப்பிறழ்வு காரணமாக தாக்கினார் எனக் காரணம் கட்டப்பட்டு பின்னர் அவர் விடுதலை செய்யப்படுகின்றார்.இந்த விடுதலைக்கான நீதி, அந்தத் தாக்குதலை நிகழ்த்திய விஜேமுனி மனநிலை பிறழ்ந்தவராக இருந்தார் என்பதே. ஒரு நாட்டின் பிரதமரைத் தாக்கிய வழக்கில் இந்த நீதியின் அடிப்படையில் தாக்கிய நபர் விடுவிக்கப்பட்ட நாட்டில்தான், பலபேர் முன்னிலையில் பொது இடமொன்றில் மனப்பிறழ்வு அடைந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார்
தொடர்ந்து வாசிக்க

அகதிகளை பலவந்தமாக படகில் இருந்து இறக்க மாட்டோம் - இந்தோனேசியா

AddThis Social Bookmark Button

ஆஸ்திரேலியக் கப்பலில், இந்தோனேஷியத் துறைமுகத்தில் உள்ள 78 இலங்கையர்களையும் இறக்குவதற்குப் பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லையென இந்தோனேஷியா தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியக் கப்பலில் உள்ள இலங்கையர்கள் அதிலிருந்து இறங்க மறுத்து வருகின்ற நிலையில் இந்தோனேஷியாவின் வெளிவிவகார அமைச்சர் மார்ட்டி நட்டலேகவா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மக்கள் ஏற்கனவே மிக நெருக்கடியான சூழ்நிலைகளைக் சந்தித்துள்ளனர். கடும் துயரங்களை சந்தித்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ள அவர், பலவந்தமான நடவடிக்கையின் மூலம் இந்த மக்களை



தொடர்ந்து வாசிக்க....

Friday, October 30, 2009

நாளை சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திருப்பதிக்கு விஜயம்!?

AddThis Social Bookmark Button

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்ததாக, சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீதும், இராணுவத்தினர் மீதும் தமிழக தமிழின உணர்வாளர்கள் முதற்கொண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வரை குற்றம் சுமத்தியுள்ள வேளையில்,

இலங்கைத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் தொப்புள் கொடி உறவுகள், தமிழகத்தில் உள்ள வேளையில், ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி வெங்கடாச்சலபதி ஆலயத்திற்கு விஜயம் மேற்கொள்ள சிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.இதன் படி, சிறப்பு விமானம் மூலம் கொழும்பில் இருந்து ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு நாளை வருகையளிக்கும் அவர், பின்னர் கால் மூலம் திருப்பதி மலைக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாளை நண்பகல் 1.30 மணியளவில் ஏழுமலையானை தரிசனம் செய்வதுடன், அவருக்கு தேவஸ்த்தானம் சார்பில் சிறப்பான வரவேறு அளிக்கப்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க...

Thursday, October 29, 2009

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா - கருணாநிதிக்கு தமிழர் படைப்பாளிகள் கழகம் சாடல்!

AddThis Social Bookmark Button
தமிழக முதல்வர் கருணாநிதியினால் அறிவிக்கப்பட்ட உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, அடுத்த வருடம் கோவையில் நடைபெறவுள்ள நிலையில், இம்மாநாட்டிற்கு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து, தமிழர் படைப்பாளிகள் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ் முழுமையான அறிக்கை கீழே தரப்படுகிறது.

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பார்கள். முதல்வர் கருணாநிதி என்ன பாடுபட்டும் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தியே தீருவது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். மறுத்துரைப்போரை அவரது பாணியில் “சிறுநரிக் கும்பல்” “கும்பிட்டுக் கிடக்கும் விபீஷணக் கூட்டம்” “நெடுமரங்கள்” என்றெல்லாம் வசை பாடுகிறார். ஏதோ தமிழ் வளர்ப்பதை தானே ஒட்டு மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருப்பதாக கருணாநிதி நினைக்கிறார்.சிங்கள இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 20,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில் குருதி ஆறு பாய்ந்து கொண்டிருந்தபோது முதல்வர் கருணாநிதி தில்லியில் கூடாரமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.

இப்போதெல்லாம் முதல்வர் கருணாநிதி தன்னைக் கண்ணாடியில் பார்ப்பதில்லை போல் படுகிறது. பார்த்திருந்தால் யார் சிறுநரிக் கும்பல்,

தொடர்ந்து வாசிக்க..

கொமன் வெல்த் போட்டிகளின் முன்னோட்ட நிகழ்வுகள் - எலிசபெத் மகாராணியார் பங்கேற்பு


2010 ம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெறவுள்ள 11 வது கொமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான குறுந்தடியினை, (Baton) ஐ இங்கிலாந்தின் எலிசபெத் மகாராணியிடமிருந்து பெற்றுக்கொண்டார் இந்தியக்குடியரசு தலைவி பிரதீபா பட்டீல்!சுமார் ஒரு ஆண்டு காலம் நடைபெறவுள்ள இக்கொமன் வெல்த் போட்டிகளுக்கான தொடர் ஓட்டத்தின் முன்னோட்டமாக இந்த தடி வழங்கப்படுகிறது.


தொடர்ந்து வாசிக்க

ஏப்ரலில் சேவைக்கு வருகிறது விஜயகாந்தின் கேப்டன் டி.வி



தமிழகத்தில் அரசியல் பரப்புரைச் சாதனமாக அல்லது அரசியற் கட்சி அடையாளமாக ஆகிப் போய்விட்டது தொலைக்காட்சி. அந்த அடையாளத்தை நடிகர் விஜய்காந்தின் தேமுதிகவும் பெற்றுவிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய தகவல்-ஒலிபரப்பு அமைச்சகம் விஜயகாந்துக்கு தொலைக்காட்சி அனுமதியை வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.


தொடர

Wednesday, October 28, 2009

தோனியின் அதிரடி சதம் - அவுஸ்த்திரேலியாவுக்கு, இந்தியாவின் பதிலடி!

AddThis Social Bookmark Button

இந்திய, அவுஸ்த்திரேலிய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில், 99 ரன்களால் வெற்றி பெற்று, சரியான பதிலடியினை கொடுத்துள்ளது இந்தியா!

நாக்பூரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டியில், டொஸ் வென்ற போதும், இந்தியாவையே துடுப்பெடுத்தாட அழைத்தது அவுஸ்த்திரேலியா!

அதன் படி களமிறங்கிய இந்திய ஆரம்ப துடுப்பாட்ட ஷேவாக் (6 பவுன்றிகள், 1 சிக்ஸர் அடங்களாக 40 ரன்கள் ) சிறப்பான



தொடர்ந்து வாசிக்க...

ராஜீவ் படுகொலையில் 'றோ' தொடர்பு என சிறிலங்கா உளவுப்பிரிவு சந்தேகம்?

AddThis Social Bookmark Button

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்வதற்கு பயன்படுத்திய ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து இந்தியா புலனாய்வு பிரிவான றோவினால் தற்கொலைதாரிகளுக்கு வழங்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவுக்கு நெருக்கிய வட்டாரங்களிலிருந்தே இத் தகவல் கசிய விடப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

பயங்கரவாதம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவரும், விடுதலைப்புலிகளின் சர்வதேசத் தொடர்பாளரான கே.பி.யின் கைதில் முக்கிய பங்காற்றியவருமான, சிங்கப்பூரை தளமாக கொண்டியங்கும் றொகான் குணவர்த்தன, ராஜீவ் கொலை தொடர்பான ஆய்வில், மேற்கண்ட குற்றச்சாட்டைக் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் சிறிலங்கா உளவுத்துறைசார் ஊடகங்கள் வாயிலாக இது விடயம் கசிய விடப்பட்டிருப்பதாகவும் அறியப்படுகிறது.

கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைத்திருக்கும், குமரன் பத்மநாதன் எனும் கே.பி.யை விசாரிப்பதற்கு இந்தியா விடுத்த கோரிக்கைகள் சிறிலங்கா அரசினால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்ட நிலையில், இருநாடுகளின் புலனாய்வு பிரிவினருக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது...


தொடர்ந்து வாசிக்க...

கரைசேரா படகு அகதிகளாக ஈழத் தமிழர்கள் இந்தோனேஷியக் கடலில்

AddThis Social Bookmark Button இலங்கை அகதிகள் 78 பேரை ஏற்றிச் சென்ற அவுஸ்திரேலிய சுங்கக் கப்பலிலுள்ள அகதிகளை இந்தோனேஷியாவின் கிஜாங் துறைகத்தில் இறக்குவதற்கு அம்மாகாண ஆளுநர் அனுமதி மறுத்துள்ளார்.

இந்தோனேஷியா அகதிகளை கொண்டுவந்து குவிக்கும் இடமல்ல என்று ஆளுநர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவை நோக்கி இலங்கையர்கள் சென்று கொண்டிருந்த படகு கடந்த வாரம் சுமாத்ரா தீவுக்கருகில் கோளாறுக்குள்ளானதை அடுத்து அதிலிருந்த இலங்கையர்களை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இந்தோனேஷியா அவுஸ்திரேலியாவுக்கு இணக்கம் தெரிவித்திருந்தது.

அகதிகளை நடத்துவது தொடர்பாக அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேஷியாவுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த அமுலாக்கத்தின் முதல் நடவடிக்கையாகவே தற்போது இலங்கை அகதிகள் இந்தோனேஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வாசிக்க...

Tuesday, October 27, 2009

சர்வதேசசதி இல்லை, அரசே நாட்டை அழிக்கின்றது - தயாசிறி எம்.பி



சர்வதேசச் சதி என்று இங்கு எதுவுமே இல்லை. அரசாங்கமே அதற்கான பாதைகளை அமைத்து வருகின்றது. நாட்டை ஒரு வித குழப்பத்திற்கும் பரபரப்புக்கும் இட்டுச் செல்கின்ற ஆட்சியாளர்களே பலதரப்பட்ட சதித் திட்டங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தொடர்ந்து வாசிக்க

'சரத்' பெயர் ஊடகங்களில் வருவதை அரசு தடுக்க முனைகிறது - ரனில்


பன்றிக் காய்ச்சலைத் தோற்றுவிக்கும் ஏ. எச் 1, என் 1 வைரஸ் நாட்டில் பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருவது போல் தற்போது சரத் என்ற வார்த்தை அரசாங்கத்தை பீதியடையச் செய்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தொடர்ந்து வாசிக்க

அவுஸ்திரேலியா செல்ல அனுமதியில்லையெனில் படகுக்கு தீ வைப்பதாக மிரட்டல்?

AddThis Social Bookmark Button இந்தோனேஷியாவில் மெராக் துறைகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை படகு மக்கள் தாங்கள் கிறிஸ்மஸ் தீவுக்குச் செல்ல அனுமதிக்கப்படாத பட்சத்தில் தங்கள் படகை தீ வைத்து கொளுத்தப் போவதாக எச்சத்துள்ளனர் என இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல அனுமதி..

தொடர்ந்து வாசிக்க..

சுதந்திரத்தின் பின், இந்த ஆட்சியிலே ஊடக அடக்குமுறை உச்சம் - லால் பெரேரா



நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் எந்த ஆட்சியிலும் இல்லாதவாறு இந்த ஆட்சியிலேயே ஊடக அடக்குறை மிக உச்ச அளவில் இடம்பெற்று வருவதுடன், மக்கள் தகவல் அறிந்து கொள்ளும் உரிமைகளுக்கும் சவால் விடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கப் பேச்சாளர் லால் பெரேரா தெரிவித்தார்.


தொடர்ந்து வாசிக்க

Monday, October 26, 2009

ஈழத்தமிழர் முகாம் குறித்த கனிமொழி கவலை, மத்திய அரசுக்கான எதிர்வினை?



இடம் பெயர்ந்தோர் முகாம்கள் எதுவும் தமிழர்கள் வாழ முடியாத சூழலில் உள்ளன என்று திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இலங்கை சென்று திரும்பிய தமிழக எம்.பிக்கள் குழு , முகாம்களைப் பார்வையிட்ட பின், இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் முகாம் வசதிகள் திருப்தி தருவதாக இருக்கிறது எனத் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து வாசிக்க

Sunday, October 25, 2009

இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு விகாரைகள் கட்டப்பட்டதை மஹாவம்சம் கூறுகிறது - தங்கேஸ்வரி



கிழக்கிலுள்ள இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டே விகாரைகள் கட்டப்பட்டன என்று மஹா வசம்சத்திலேயே கூறப்பட்டிருப்பதனை தொல்லியல் சக்கரவர்த்தியான எல்லாவெல மேதானந்த தேரர் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான கே. தங்கேஸ்வரி தெரிவித்தார்.


தொடர்ந்து வாசிக்க

Saturday, October 24, 2009

'முள் வேலி' - தனது இலங்கை விஜயத்தின் அனுபவங்களை வார இதழில் எழுதுகிறார் திருமா

AddThis Social Bookmark Button

பிரதமர் மன்மோகன் சிங்கினையும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியினையும் சந்தித்திருந்த, இலங்கை சென்று வந்த தமிழக நாடாளுமன்றக்குழுவில் தொல்.திருமாவளவன் இடம்பெறாதது, தி.மு.க, காங்கிரஸில் இருந்து திருமா புறக்கணிப்புக்கான ஆரம்பமாக அமைந்துள்ளது.

அழைப்பு விடுக்கப்படாததினால் தான், பிரதமரை பார்க்க செல்லவில்லை, என தெரிவித்த போதும்,காங்கிரசின் கோபத்தினை அறிந்து தான், பிரதமரை சந்திக்க திருமாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இலங்கை சென்று வந்த தமிழக எம்.பிக்களில் திருமாவளவன் மட்டுமே, அகதிமுகாம் மக்கள் கடும் துன்பப்படுவதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.


தொடர்ந்து வாசிக்க...

Friday, October 23, 2009

இலங்கை இறுதியுத்த குற்றச் செயல்களுக்கு சர்வதேச விசாரணை - ஐ.நா


இலங்கையில் நடைபெற்ற 26 வருட கால யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் யுத்தக் குற்றச் செயல்கள் புரியப்பட்டனவா என்பதைக் கண்டறிவதற்கு, காஸாவில் இடம்பெற்ற யுத்தம் குறித்து நடத்தப்பட்ட விசாரணை போன்றதொரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


தொடர்ந்து வாசிக்க

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றத்திற்கு புதிய ஆதாரம் - அமெரிக்கா 68 பக்க அறிக்கை!

AddThis Social Bookmark Button

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையே இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற கால கட்டத்தில் பெருமளவான பொதுமகக்ள் கொல்லப்பட்டதாகவும், யுத்தக்குற்றச்செயல்கள் இடம்பெற்றதாகவும், மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்கவும் இதனை ஆமோதித்திருந்தது. எனினும், சிறிலங்கா அரசு திட்டவட்டமாக மறுத்ததுடன், இது ஒரு தவறான கருத்தென கூறியது. இந்நிலையில், போர்க்குற்றத்திற்கான ஆதாரங்கள், தகவல்கள் உள்ளடக்கியதாக, அறிக்கை ஒன்றினை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ளது.

60 பக்கங்களை கொண்ட இவ் அறிக்கை, தமிழீழ விடுதலைப்புலிகளின் யுத்தக்குற்றச்செயல்கள் உட்பட, சிறுவர்களும் ஆயுத மோதல்களும், பொதுமக்கள் மற்றும் அவர்களுடைய உடமைகள் பாதிப்பு, சரணடைய முனைந்த அல்லது கைது செய்யபப்ட்ட போராளிகளின் படுகொலை, ...

தொடர்ந்து வாசிக்க....

நம்ம இப்ப இருக்கிறது 2009 - சில உதாரணங்கள்!

AddThis Social Bookmark Button


நம்ம இப்ப இருக்கிறது 2009 - சில உதாரணங்கள்.. நீங்களும் இப்படித்தானா?


தொடர்ந்து வாசியுங்க....

Thursday, October 22, 2009

சிறிலங்கா இராணுவப் போர்க்குற்ற மற்றுமொரு ஆவணம்?



தமிழ் இளைஞர் சிலரது சடலங்களின் படங்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் உள்ள இளைஞரது கண்கள் பிடுங்கப்பட்டுள்ளன. மார்பில் எரிகாயங்கள் காணப்படுகின்றன.

தொடர்ந்து வாசிக்க

நடிகர் சிவகுமாரின் நயமான பேச்சு



நடிகர் சிவகுமார், நடிகர் என்பதற்கும் மேலாக நல்ல ஒவியர், நல்ல மனிதர் என்பது பலரும் அறிந்ததே. ஆனால் அவர் நல்ல இலக்கிய வாசகர், பேச்சாளர் என்பது பலரும் அறியார். அன்மையில் சேலத்தில் ஒரு கல்லூரி விழாவில் அவர் ஆற்றிய உரையின் கானொளி

தொடர்ந்து வாசிக்க

ஆதவன் - ஒரு ரசிகன் பார்வையில்

AddThis Social Bookmark Button (வாசிப்பவர்கள் கவனத்திற்கு - திரைக்கதையும் சேர்த்தே சொல்லியிருக்கிறோம்!, ஆட்சேபனை இல்லையென்றால் தொடர்ந்து வாசியுங்கள் ஹி..ஹி) இன்றைய நிலையில், தமிழ் திரையுலகில் பெரிய பெரிய நிறுவனங்களும் , ஜம்பவான்களும் தங்களது அடுத்த படம் குறித்து யோசித்து வரும் வேளையில் தைரியமாக திரைப்பட தயாரிப்பில் குதித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அவருக்குள்ள இந்த தைரியத்தை நாம் முதலில் பாராட்டியே ஆகவேண்டும்.
குருவி மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலினின் அடுத்த இரண்டாவது பிரமாண்டமான தயாரிப்பு தான் ஆதவன்.

இன்றைய காலகட்டத்தில் திரையங்குகளில் இளைஞர்களும், வாலிபர்களும் தான் காலடி எடுத்து வைக்கின்றனர் எனவே அவர்களை திருப்தி செய்தாலே போதும் என கருதி கதை செல்கின்றது. குழந்தைகளின் உடலுறுப்புக்களைத் திருடி விற்கும் ஒரு கும்பலைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பு நேர்மையான நீதிபதியாக முரளி வசம் வருகின்றது.

நேர்மையான அந்த நீதிபதியை தீர்த்துக்கட்ட ஒரு கிரிமினல் கும்பல் பேரம் நடத்துகின்றது. அதில் நீதிபதியை கொலை செய்ய வரும் கூலிப்படை தலைவனாக வருகி்ன்றார் சூர்யா.

தொடர்ந்து வாசிக்க...

விற்பனைக்கு வந்தது விண்டோஸ் 7



மிகவும் பரபரப்பாகவும் சற்றே அதிக எதிர்பார்ப்புடனும் பார்க்கப்பட்ட விண்டோஸ் 7 எனும் மைக்ரோசொவ்டின் அடுத்த இயங்கு தள பதிப்பு உத்தியோக பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது

read more

மஹிந்தவுக்கு எதிரான எதிர்கட்சிகளின் கூட்டமைப்பு 29 ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!



ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் கட்டியெழுப்பப்படும் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 29ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு ஆகியன புதிய கூட்டமைப்பின் கொள்கைகளையும் அதன் யாப்பையும் ஏற்று புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

கனடாவில் அரசியல் தஞ்சம்! - ஒரு பார்வை!

AddThis Social Bookmark Button கனடாவின் வன்கூவர் தீவுக் கடலில் படகுடன் பிடிபட்ட 76 இலங்கைத் தமிழர்களை தொடர்ச்சியான தடுப்புக் காவலில் வைக்குமாறு கனடிய குடிவரவு மறுமதிப்பீட்டு சபை உறுப்பினர் லியான் கிங் உத்தரவிட்டுள்ளார். குடியேற்றவாசிகள் அங்கு வந்து சேர்ந்த விதம் பற்றிய விவரங்கள் தெளிவற்றவையாக இருப்பதால் அவர்களைப் பற்றிய சோதனையை பூர்த்தி செய்ய நேரம் நேரம் போதவில்லை என்று தெரிவித்து கனடிய குடிவரவு அமைச்சரின் பிரதிநிதி ஒருவர் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து இந்த தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க....
AddThis Social Bookmark Button மகாராஷ்டிரா , ஹரியானா மற்றும் அருணாசல பிரசேதத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. மகாராஷ்டிரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. தெலுங்கு பாஜக-சிவசேனா கூட்டணிக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்தடுத்து 3 சட்டமன்றத் தேர்தல்களில் இந்தக் கூட்டணி தோல்வி அடைந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதிவு கடந்த 13 ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு பதிவு இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

மகாராஷ்டிரத்தில் 288 மொத்தமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 76 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் 130 இடங்களி்ல் அந்தக் கட்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இது தவிர மேலும் 7 இடங்களிலும் அக் கூட்டணி முன்னிலை வகிக்கின்றது.

பாஜக 46 இடங்களிலும், அதன் கூட்டணியான சிவ......


தொடர்ந்து வாசிக்க...

Wednesday, October 21, 2009

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு - அதிமுக புறக்கணிப்பதாக அறிவிப்பு!

கருணாநிதியால் நடத்தப் பெறும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு என்பது, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் உலகத்தமிழ் மாநாடு வரிசையில் இடம் பெறாததால்,இந்த மாநாட்டை அஇஅதிமுக புறக்கணிக்கின்றது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது...

தொடர்ந்து வாசிக்க...

Tuesday, October 20, 2009

அரசியலுக்கு வருகின்றார் நடிகை மனீஷா கொய்ராலா



பிரபல இந்தி நடிகை மனீஷா கொய்ராலா விரைவில் அரசியலில் இணைந்து நாட்டிற்கு சேவை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

நேபாள நாட்டைச் சேர்ந்தவர் பிரபல இந்தி நடிகை மனீஷா கொய்ராலா. இவரது தாத்தா பி.பி.கொய்ராலா, நேபாள நாட்டின் முதலாவது பிரதமர் ஆவார்.

தொடர்ந்து வாசிக்க

படகுடன் கைப்பற்றப்பட்ட இலங்கைத்தமிழர்களைஇந்தோனேசியாவில் தங்கவைக்க அனுமதி

AddThis Social Bookmark Button இந்தோனேஷிய துறைகத்தை அடைந்துள்ள, புகலிடம் கோரும் இலங்கைத் தமிழர்கள் 78 பேரை அந்நாட்டில் தற்காலிகமாக தங்கவைப்பது தொடர்பான உடன்படிக்கை ஒன்றில் அவுஸ்திரேலியாவும் இந்தோனேஷியாவும் கைச்சாத்திட்டுள்ளதாக ஏ.எப்.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
ஜகர்த்தாவில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட்டுக்கும் இந்தோனேஷிய ஜனாதிபதி சுசிலோ யுதோயோனோவுக்கு read continue...

அமைச்சர் சிதமபரம் விழாவில் நிருபர்கள் செருப்பு அணிய தடை !


விருதுநகரில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்ட விழாவில் செருப்பு அணிய போலீசார் தடை விதித்தனர். விருதுநகரில் கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்துறை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.

தொடர்ந்து வாசிக்க

Monday, October 19, 2009

மஹிந்த அரசின் யுத்த வெற்றிச் செய்தியில் மறைக்கப்படும் உண்மைகள்!


ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை எமது நாட்டுக்கு கிடைக்காவிட்டால் நாட்டின் ஆடைக் கைத்தொழில்துறை வீழச்சியடைந்து விடும். இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழக்க நேரிடும். அரசாங்கம் சர்வதேச சமூகத்தை பகைத்துக் கொண்டுள்ளது

தொடர்ந்து வாசிக்க

கடல் வழியே தன்னந்தனியே உலகை சுற்றி வரத்தொடங்கியுள்ள 16 வயதுப்பெண்!

ஒரு சிறிய படகில், தன்னந்தனியாக உலகை சுற்றி வரவேண்டும்!'
இப்படி ஒரு ஆசை வந்தால் என்ன செய்வீர்கள்?

கற்பனை செய்து பார்த்து விட்டு, 'நல்லா இருக்கே' என்று சொல்லுவோம்!

ஆனால் நிஜமாகவே அப்படி செய்து பார்ப்போம் என புறப்பட்டுவிட்டார் அவுஸ்த்திரேலிய குட்டிப்பெண் ஜெஸிகா வட்சன்! 11 வயதில் இருந்து துரத்திய கனவு, விடா முயற்சி, இன்று அவருக்கு அதனை நனவாக்கத்தூண்டியுள்ளது.

தொடர்ச்சியாக கடல் வழியே சுமார் 230 நாட்களுக்கு, 23,000 மைல்கள் தூரத்தினை, கடந்து உலகை சுற்றி வரப்போகிறார்.
தனது 15வது வயதிலேயே இது பற்றிய அறிவிப்பினை விடுத்திருந்த ஜெசிகா குயின்ஸ்லாண்ட் பாடசாலை மாணவி ஆவார்!.

தொடர்ந்து வாசிக்க...

பிள்ளையானை பதவியில் இருந்து நீக்க வேண்டும் - கருணா!

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) அப்பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும், என தேச நிர்மாண அமைச்சரும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) கோரிக்கை விடுத்துள்ளளார்.

சமீபகாலமாக ஆளும் தரப்பினையும், கருணாவினையும் கடுமையாக விமர்சித்து வந்த பிள்ளையான், மேடைப்பேச்சுக்களில் வெளிப்படையாகவே இவ்விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்நிலையில், பிள்ளையான் கிழக்கு மாகாண மக்களை...

தொடர்ந்து வாசிக்க...

'புதினம்','தமிழ்நாதம்', இணையத்தளங்கள் சேவை நிறுத்தம் ?



ஈழம் குறித்த செய்திகளை அதிகளவில் தாங்கி வந்த 'புதினம்','தமிழ்நாதம்', ஆகிய இணையத் தளங்கள் தமது சேவையினை நிறுத்திக் கொண்டுள்ளன.
தொடர்ந்து வாசிக்க

சேனல் 4 வீடியோ உண்மையானவையே! - நிரூபிக்கிறது அமெரிக்கா



இலங்கை தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில், சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படும் காணொளிக்காட்சிகளில், எவ்வித திரிபுகளும் இல்லை, அவை உண்மையானவை என அமெரிக்க புலனாய்வு வல்லுனர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

Sunday, October 18, 2009

உலக செல்வந்தர்களில் ஒருவரான ராஜ் ராஜரட்ணம், அமெரிக்க FBI இனால் கைது!

AddThis Social Bookmark Button உலகப்பிரபல்யமான கெலான் நிறுவனத்தின் உரிமையாளரும், உலக செல்வந்தர் வரிசையில் 559 ம் இடத்தை வகிப்பவருமான அமெரிக்காவை சேர்ந்த தமிழர் வர்த்தகர் ராஜ் ராஜரட்ணம் நேற்றைய தினம் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பங்குச்சந்தை மற்றும் நிதிச்சந்தை கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடியான முறையில் இலாபமீட்டியதாகவும், 2006-07 காலப்பகுதியில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை

தொடர்ந்து வாசிக்க....

Saturday, October 17, 2009

ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ மறுபடிய்ம் விழுந்ததார் ?




கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற 8வது ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ கீழே விழுந்ததாகத் தெரியவருகிறது.

தொடர்ந்து வாசிக்க