Pages

கல்விக்கு மாணவிகள் தான், ஆனால் கலைக்கு இவர்கள் ஆசிரியைகள்!

தங்கத்தில் இருந்து தகரம் வரை எந்த ஒரு பொருளில் அணிகலன்கள் செய்து அணிந்து கொண்டாலும் பெண்களுக்கு அழகு சேர்ப்பதாகத்தான் அவைகள் இருக்கும்.

அவைகளை உடைகளின் வண்ணங்கள், டிசைன்களுக்கு ஏற்றவாறு தாங்களே செய்து அணிந்து கொள்ளும்போது எவ்வளவு ஆனந்தம் தரும்?! அதுவும் அந்த அணிகலன்கள் சுற்று சூழல் பாதுகாப்பு உரியவையாக அமைந்து விட்டால்? பெருமைக்கும், மகிழ்ச்சிக்கும் சொல்லவா வேண்டும்!
சென்னை ஜிஆர் டிமஹாலக்ஷ்மி வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பில் படிக்கிறார் சுஹாசினி, 11ம் வகுப்பில் படிக்கிறார் சுபிக்ஷா. இவர்கள் இருவரும் சிறு பிராயத்தில் இருந்தே தோழிகளாம். இவர் செய்ய விரும்புவதை அவர் செய்ய விரும்புவது,இவர் அணிய விரும்புவதை அவர் அணிய விரும்புவது என்று, இருவரின் நட்பும் இணையான தண்டவாளம் போல பயணித்து வருகிறது. : தொடர்ந்து வாசிக்க... :  http://ow.ly/ookVa

ஆதலால் காதல் செய்வீர் விமர்சனம்

அம்மாவுக்கு எதிரில் லவ்வரை கூட அண்ணா என்று அழைக்கிற போலித்தனமான பெண்களும், காதல் என்கிற பெயரில் இவர்கள் அடிக்கிற கேவல கூத்துகளும்தான் முழு படமும். இது பெண்ணை பெற்ற பெற்றோர்கள் மட்டுமல்ல, பிள்ளையை பெற்றவர்களும் கவனமாக கவனிக்க வேண்டிய கைடும் கூட. ஆதலால் காதல் செய்வீர் விமர்சனம் http://ow.ly/o2Rt1

ஆதலால் காதல் செய்வீர் விமர்சனம்


Sunday, August 18, 2013

2013 லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் உயரிய விருதுகளை வென்ற திரைப்படங்கள் பற்றி ஒரு பார்வை



2013 லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் உயரிய விருதுகளை வென்ற திரைப்படங்கள் பற்றி ஒரு பார்வை -

6வது ஆண்டில் 4தமிழ்மீடியா ! நல்லவை எண்ணி நடக்கின்றோம் !

ஐந்து வருடங்கள் நிறைவாகி ஆறாவது ஆண்டினைத் இன்று தொடங்குகிறது 4தமிழ்மீடியா. 2008 ஆகஸ்ட் 14ந் திகதி, தனது அதிகாரபூர்வமான செய்திச் சேவையைத் தொடங்கிய 4தமிழ்மீடியாவின் இந்த ஐந்தாண்டுப் பயணத்தில், உடன் வந்த வாசகர்கள், செய்தியாளர்கள், ஆர்வலர்கள் என அனைவருக்குமான நன்றிகளை முதலில் தெரிவித்து அகம் மகிழ்கின்றோம்.
கடந்த வருடம் 4தமிழ்மீடியாவின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தில், 4தமிழ்மீடியாவின் செயற்பணிகள் குறித்த விரிவான தொடர் கட்டுரை ஒன்றினைத் தந்திருந்தோம். நீண்ட கால நோக்கிலான செயற்திட்டங்களுடன் தொடரும் இப் பயணத்தில், இந்த ஆண்டு தொடங்கிய பணிகள் பலவாக இருந்த போதும், அவற்றின் அறுவடைக்கான காலம்  இப்போதாக அமையவில்லை. அதனால் அவை குறித்து முழுமையாக இப்போதைக்கு அறியத் தரவும் முடியவில்லை. ஆனால் நிறைவு கண்ட பணியாகவும், இந்த ஆண்டின் முற்பகுதியில், புதிய தொடக்கமாகவும், 4தமிழ்மீடியா வெளியிட்ட திருப்பூர் ஜோதிஜியின் ' டாலர் நகரம் ' புத்தகத்தினைக் குறிப்பிடலாம்.
 நல்லவை எண்ணி நடக்கின்றோம் !

'தலைவா' : இதுவரை நடந்ததென்ன? - ஒரு 'ரியர் மிரர்' பார்வை


'நேர்ந்து விட்ட ஆடாக இருந்தாலும் நினைச்சவுடனே வெட்ட முடியாது' என்பார்கள் கிராமத்தில்.

 அதற்கென ஒரு நேரம் வர வேண்டுமாம். நடிகர் விஜய் நேர்ந்து விடப்பட்ட ஆடு அல்ல. ஆனால் சிலர் காத்துக் கொண்டிருந்த 'பலி நேரம்' இப்போதுதான் வந்திருக்கிறது.

நடிகர் விஜய்யின் 'தலைவா' திரைப்படம் துவங்கப்பட்ட போது கூட எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லை. ஆனால் ரிலீசுக்கு நெருங்குகிற நாளில்தான் குழப்பமும், கூத்தும்! ஒரு தலைவன் யாராலும் உருவாக்கப்படுதில்லை, அவன் தானாக உருவாகிறான் என்கிற கருத்தை மையமாக கொண்ட பட(மா)ம் இது. மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள் போன்ற படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கிறார்.
 
  தொடர்ந்து வாசிக்க : 'தலைவா' : இதுவரை நடந்ததென்ன? - ஒரு 'ரியர் மிரர்' பார்வை 

Thursday, August 1, 2013

எதிர்கால இந்தியாவின் மருத்துவர்களை காப்பாற்றுங்கள் : இணையத்தின் வழியே புதிய புரட்சி




''இந்தியாவில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் பிரவசத்தின் போது உயிரிழக்கிறார். லட்சக்கணக்கான குழந்தைகள், தாங்கள் பிறந்த அதே நாளில் உயிரிழக்கின்றன. இந்த அவல நிலையைத் தடுக்க பல்லாயிரக்கணக்கான மருத்துவ இளைஞர்கள் உங்களுக்காக சேவை செய்யத் தயாராக இருக்கிறார்கள். எமக்குத் தேவை அரசிடமிருந்து எங்களுக்கான அனுமதியே. அதை நோக்கிப் போராடிச் செல்லும் எங்களுடன் கை கோருங்கள் என்கிறது இப் பிரச்சாரம். தொடர்ந்து வாசிக்க : - http://ow.ly/nwDMM