Friday, February 27, 2009

வன்னி வான்பரப்பில் சிறிலங்கா விமானப்படையின் தாக்குதல் விமானம் சுட்டு விழுத்தப்பட்டுள்ளது

1 comments

வன்னி வான்பரப்பில் பொது மக்கள் மீ தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா விமானப்படை விமானம் ஒன்று சுட்டு விழுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இன்று முற்பகலில் , வான் தாக்குதல் நடாத்த வந்த விமானத்தின் மீது தரையிலிருந்து விமான எதிர்ப்பு ஏவுகணையால் நடத்தப்பட்ட தாக்குதலில் விமானம் விழுத்தப்பட்டுள்ளதாகச் முந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. விமானம் எரிந்தவாறு விழுந்ததைப் பொது மக்கள் கண்டதாகவும் அறியப்படுகிறது. இது குறித்த விபரங்கள் ஏதும் இன்னமும் விடுதலைப்புலிகளாலோ, சிறிலங்கா அரச தரப்பாலோ உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரங்கள் விரைவில்...

Sunday, February 22, 2009

தொடரும் தமிழக வக்கீல்கள் போராட்டம் பிற மாநிலங்களுக்கும் விரிவுபெறலாம்

0 comments

தமிழகத்தில் வக்கீல்களுக்கும், காவற்துறையினருக்குமான மோதல் அரசியல் முக்கியத்துவம் மிக்கப் பிரச்சனையாக மாறிவருகிறது. ஈழத்தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு கோரி முத்துக்குமார் தீக்குளித்த நாள் முதலாக பல்வேறு போராட்டங்களைத் தமிழகத்தில் வக்கீல்கள் முன்னெடுத்து வந்தனர்.

இந்தப் போராட்டங்களைத் திசை திருப்பும் வகையில், சுப்பிரமணிய சுவாமி மீதான தாக்குதலை முன் வைத்து வக்கீல்கள் மீது காவற்துறை ஏவப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் வக்கீல்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த உத்தரவு உடனடியாக வாபஸ் பெறப்படவேண்டுமென்றும், இல்லையென்றால் இன்று தடையை மீறி உள் நுழையும் போராட்டம் நடைபெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகளுக்கு ( தமிழகத்தின் இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகளின் ஆடீயோ இணைப்பு )

Friday, February 13, 2009

விடுதலையெனும் பெயரில் சிறைப்படுத்தப்படும் வன்னி மக்கள்

0 comments


வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு வரும் தமிழ்மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பதாக சிறிலங்கா அரசால் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் தற்போது இவ் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கபட்டிருக்கும் தமிழ் மக்களை, 'நலன்புரி முகாம்கள்' எனும் பெயரில் நீண்ட காலத்துக்குச் தனிமைச்சிறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறதாக அறிய முடிகிறது. இந்நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு உதவிகள் கோரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

மேலும் செய்திகளுக்கு

Thursday, February 12, 2009

ஐ.நா. சபையின் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளிப்பு

1 comments



சுவிற்சர்லாந்து ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா சபை அலுவலகத்துக்கு முன்பாக, ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்திரப்பதாகச் சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவில் தொடர்ச்சியாக ஈழத் தமிழ் மக்கள் மேல் நடத்தபட்டுவரும் இனப்படுகொலைகளைக் ஐ.நா சபை முதல், அனைத்துலகமும் கண்டும் காணாதிருக்கும் நிலையைக் கண்டித்தே அவர் தீக்குளித்திருப்பதாக அறியப்படுகிறது.

இலங்கைக்கு வெளியே ஈழம் உருவாகுதல் சாத்தியமா..?

0 comments
தமிழீழக் கோரிக்கை , இன்று ஈழத் தமிழ் மக்களுக்குமப்பால் மேலும் பல இடங்களிலும் பேசப்படுகின்ற விடயமாகவுள்ளது. அரசியல் உயர்பீடங்களிலிருந்து இணையக் குழுமங்கள் வரை உரையாடப்படுகின்றன. இந்த உரையாடல்களில் பேசப்படும் விடயங்கள் பல ஈழத்தமிழர்களுக்கு ஏற்புடையதாகவும் , எதிரானதாகவும் இருந்து வருகின்றன. சில கருத்துக்கள் புதிய சிந்தனையாகவும், இன்னும் சில கருத்துக்கள் ஈழப்பிரச்சினை தொடங்கிய காலந்தொட்டுக் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன கருத்துக்களாகவும் இருக்கின்றன. இதைவிட வேறு சிலகருத்துக்கள் பல உள் நோக்கம் கொண்டவையாகவும் இருக்கின்றன.

மன்றத்தில் உரையாட

Thursday, February 5, 2009

சிறிலங்காத் தலைநகர் கொழும்பில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கல்லெறி

3 comments


சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், பிரேமதாச ஸ்ரேடியத்தில் இன்று இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சற்றுமுன் இந்திய வீர்களை நோக்கிக் பார்ரவையாளர்கள் பகுதியில் இருந்து கல்லெறியப்பட்டதாகவும், அதனை இந்தி அணியின் தலைவர் டோனி நடுவரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து விளையாட்டு இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்திய வீர்ரகள் சிலர் மைதானத்தை விட்டு விலகியதாகவும், நேரடி ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளுக்கு

Wednesday, February 4, 2009

சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரிலுள்ள ஐ.நா சபை முன்பாக ஈழத்தமிழ் மக்கள் கடலெனத் திரண்டிருக்கின்றார்கள்.

1 comments
ஜெனிவா நகரிலிருந்து நேடியாத் தொகுக்கப்படும் செய்திகள்:
சிறிலங்கா அரசின் சுதந்திர தினமாகிய பெப்ரவரி 4ம் திகதியை, ஈழத்தமிழ்மக்கள் தங்கள் கரிநாளெனப் பிரகடனப்படுத்தி, சுவிற்சர்லாந்தின் ஜெனிவாநகரில் அமைந்துள்ள ஐ.நா சபையின் முன்னாக, பல்லாயிரக்கணக்கில் கடலெனத் திரண்டெழுந்து தங்கள் உணர்வுபூர்வமான கண்டனங்களைப் பேரெழுச்சியாகத் தந்நத வண்ணமிருக்கின்றார்கள். காலையில் இருந்தே இந்நிகழ்வு நடைபெறும் ஐ.நா முன்றலை நோக்கி பெருமளவில் திரண்டவண்ணமேயிருந்தார்கள்.

Tuesday, February 3, 2009

வன்னியில் சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்

2 comments

வன்னியில் கேப்பாபுலவு என்ற இடத்தில் சிறிலங்கா படையினரின் முன்னரங்க நிலைகள் மீது வெடிமருந்து நிரப்பிய ஊர்தியுடன் இரண்டு கரும்புலிகள் மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கும் முள்ளிவளைக்கும் இடையில் உள்ள கேப்பாபுலவு என்ற இடத்தில் முன்னேறி நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினரின் நிலைகள் மீது நேற்று செவ்வாய்க்கிழமை வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி மூலம் இரண்டு கரும்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்

மேலும் வாசிக்க

Monday, February 2, 2009

ஐயோ...! இந்தியா நாசமாப் போக...

1 comments




"ஐயோ...! இந்தியா நாசமாப் போக.."

இந்த வாசகத்தைக் கேட்டதும் உங்களுக்குப் பதற்றம் வருகிறதா..? பெருங்குரலெடுத்து ஒப்பாரிவைத்த அந்தப் பெண் திடீரென இப்படிக் கத்தினாள். சற்றும் எதிர் பார்க்கவில்லை ஆனால் அந்த அபலைத் தாயின் கதறலால் அதிர்ந்து போனேன். ஈழத்து மக்கள் பலரின் மனதிலும், இந்திய மத்திய அரசு ஈழத் தமிழ்மக்கள் குறித்துச் செயற்படும் விதம் பற்றி அதிருப்தியான மனநிலை காணப்பட்டாலும் கூட, யாரும் வாய்விட்டுச் சொல்லாத வாசகங்கள் அவை. ஆனால் வன்னியிலிருந்து கதறியழுத ஒரு தாயின் வாயிலிருந்து வந்து விழுந்த வாசகங்கள் இவை.

தொடர்ந்து வாசிக்க

Friday, January 30, 2009

முத்துக்குமரனுக்கு அஞ்சலி செலுத்த இருபதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் வீடியோ இணைப்பு

0 comments
ஈழத்தமிழர் பிரச்சனையில், இந்திய மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, சென்னையிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களின் முன்பாக, தீக்குளித்து மரணமான முத்துக்குமரனுக்கு அஞ்சலி செலுத்த, தமிழகத்தின் பல பகுதிகளிலுமிருந்து இருபதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள் சென்னை கொளத்தூருக்கு வந்த வண்ணமிருப்பதாகத் தெரிகிறது.

மாணவர்கள், இளைஞர்கள், அலுவலகர்கள் எனபல்வேறு தரப்பினரும் குழுக்களாக வந்து குவிந்த வண்ணமிருப்பதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அங்கிருந்து எமது செய்தியாளர் சற்று முன் வழங்கிய ஒலிவழிச் செய்தி மற்றும் காணொளி இணைப்பு

Thursday, January 29, 2009

முத்துக்குமாரைக் கொன்றவர்கள்

0 comments

ஈழத்தமிழருக்கு இழைக்கப்படும் இன்னல்களுக்குத் துணைபோகும், இந்திய மத்திய அரசைக் கண்டித்து, மாநில அரசின் தலைமையை விமர்சித்து , தீக்குளித்து மடிந்து போயிருக்கின்றான் தமிழகத்து இளைஞன் முத்துக்குமார். பொதுப்படையாகப் பார்க்கும் போது, இது ஏதோ உணர்ச்சி மேலீட்டால் நிகழ்ந்தது போலவும், ஈழத்தமிழர்கள் மீதான பெரு விருப்பின் பேரால் நிகழ்ந்தது போலத் தென்னபட்டாலும், தீக்குளித்த இளைஞன் முத்துக்குமார் தன் மரணத்தின் பெறுமதியை உணர்த்தும் வகையில், மரணசாசனமாக அறிக்கையொன்றினை விட்டுச் சென்றிருக்கின்றான். தொடர்ந்து வாசிக்க

என்னைவிடப்புத்தி கூர்மையுள்ள ஈழத்துக் குழந்தைகளின் மரணத்தின் முன் என் மரணம் துச்சம்" - தீக்குளித்த முத்துக்குமாரின் மரண வாக்கு மூலம்

0 comments
" என்னைவிடப் புத்திகூர்மையுடைய எத்தனையோ ஈழத்தமிழ்க்குழத்தைகளின் பரிதாபமான மரணத்தின் முன் எனது மரணம் துச்சம் " என ஈழத்தமிழர் பிரச்சினைக்காக சென்னையில் ராஸ் பவனுக்கு முன் தீக்குளித்த தூத்துக்குடி இளைஞர், இறப்பதற்கு முன் வைத்தியர்களிடம் அளித்த மரணவாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.

அங்கே உருக்மான வேண்டுகோள் விடுத்த திரு. வை.கோ அவர்களின் உரையின் ஒலிவடிவை இங்கே கேட்கலாம்.

Wednesday, January 21, 2009

வன்னி வான் பரப்பில் சிறிலங்கா விமானப்படை விமானம் சுடப்பட்டது ?

0 comments


இலங்கை விமானப்படையினரின் மிக் வைற்றர் ஜெட் ரக போர் விமானம் ஒன்று இன்று புதன்கிழமை வன்னிப் போர்முனையில் பறப்பில் ஈடுபட்டிருந்த சமயம் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் உள்ள வன்னிபடைத் தலைமையகத்தை மேற்கோள் காட்டி, வன்னி வான்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தரப்பு இது தொடர்பாக எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது, மூன்று விமானப்படையினர் விமானத்தில் இருந்துள்ளனர் எனவும், இரஷ்யத் தயாரிப்பான இந்த குண்டு வீச்சு விமானம் , லேசர் கருவி வசதி, ரொக்கட், ஏவுகணைகள் மற்றும் பல்வகைப்பட்ட பெருந்தொகையான குண்டுகளையும் எடுத்துச் செல்லக்கூடிய வசதியும் மிக்கது.


விடுதலைப்புலிகளின் இலக்குகள் எனச் சொல்லிக்கொண்டு, வன்னியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீது் நடத்தப்பட்ட தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுவீச்சுகள் இந்த விமானத்தின் மூலமே நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இச் செய்தி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை .


மேலும் செய்திகளுக்கு

Sunday, January 18, 2009

தொல். திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்ட நிறைவுரை - ஒலிவடிவம்

0 comments

விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் இலங்கையில் போர்நிறுத்தம் செய்து, தமிழ்மக்களைக் காப்பாற் வகைசெய்யுமாறு, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இந்திய மத்திய அரசைக் கோரி நடாத்திய சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை, விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள், அரசியற் கட்சித் தலைவர்கள், கேட்டுக்கொண்டதற்கமைவாக 18.01.09 ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தார்.

போராட்டத்தை நிறைவு செய்ய முன் விரிவான ஒரு உரையில் தன்போராட்டத்தின் நோக்கம், நிறைவு, நீட்சி என்பன பற்றி விரிவாகப் பேசினார். அவரது முழு உரையின் ஒலிவடிவம்.

தொல். திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்தார்.

1 comments
(ஆடியோச் செய்தி இணைக்கப்பட்டுள்ளது) சென்னை மறைமலைநகரில் கடந்த நான்கு தினங்களாக, ஈழத்தமிழர்களைப்பாதுகாக்க இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்துமாறு, இந்திய மத்திய அரசைக்கோரி, நடாத்தி வந்த உண்ணாநிலைப்போராட்டத்தினை, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ்,

எமது செய்தியாளர் வழங்கும் ஒலிவழிச் செய்தி:

திருமாவளவன் உண்ணாநிலைப்போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது

0 comments

(ஆடியோச் செய்தி இணைக்கப்பட்டுள்ளது) சிறிலங்கா அரச படைகளின் வல்வளைப்புக்குள்ளாகியிருக்கும், தமிழமக்களின் உயிர் காக்க வேண்டி, போரை உடன் நிறுத்தக் கோரி 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனின் உடல்நிலையில் சற்று சோர்வு காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 15ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய அவர் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார்.

இன்று காலை அவர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டதாகவும், பேண்ட், சட்டை உடையிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த அவர் நாற்காலியில் சோர்வோடு அமர்ந்திருக்கவும் காணப்பட்டதாகத் தெரியவருகிறது. வைத்தியர்கள் அவ்வப்போது, அவரது உடல்நிலையைப் பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய்விட்டதால் அவருக்கு மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டு வருவதாகவும், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துவதால் வயிற்று புரட்டலும் ஏற்பட்டு வருவதாகவும், வைத்தியர்கள் தெரிவி்க்கின்றனர்.

இந்நிலையில் முதலுதவிக்குழுவொன்றும், அம்புலன்ஸ் வண்டியொன்றும், வைத்தியர் குழுவும், தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது, திருமாவளவனின் தாயார் பெரியம்மா, தம்பி செங்குட்டுவன் ஆகியோரும் உண்ணாவிரத மேடையில் அவர் அருகிலேயே இருந்து கவனித்து வருகின்றனர்.

ஓடியோ செய்தி

Saturday, January 3, 2009

அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல்

0 comments

கிளிநொச்சிக்குள் சிறிலங்கா இராணுவம் பிரவேசித்திருப்பது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களிடையே பலமான அதிர்வினை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத் தமிழர் போராட்டத்தின் நீள் நிலைப்போராட்டத்தினைத் தெரிந்தவர்கள் இதுவும் கடந்து போகும் என்றிருக்கின்றார்கள். போர்க்களத்தின் போராளிகள் வீழோம் , வெல்வோம் என உறுதிப்படச் சொல்கின்றார்கள் ..அத்தகைய உறுதியின் குரல் வரும் கவிவரிகள்....

ஓடியோ இணைப்பு

Sunday, December 28, 2008

சிறிலங்கா இராணுவத்தின் போர்க்குற்றம். அம்பலமாக்கியது வீடியோப்பதிவு

0 comments

சிங்கள இனவெறி இராணுவத்தின் வக்கிர உச்சமாக, போரில் களப்பலியான பெண் போராளிகளை நிர்வாணப்படுத்திப் பாலியல் வக்கிரம் செய்த பின் அதை காட்சிப்பதிவு செய்து மகிழ்ந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்திருக்கிறது. எமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு வீடியோப் பதிவில் மனதை அதிரவைக்கும் அந்தக் கொடூரம் பதிவாகியிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனோம். பெண் போராளிகளை அவமரியாதை செய்யும் வகையில் அமைந்திருந்த அந்தக் காட்சிப்பதிவினை வெளியிட எமது மனச்சாட்சி இடந்தரவில்லை. ஆயினும் இந்தப் போரியற் குற்றத்தை உலகின் கண்களுக்கு வெளிக்கொணர வேண்டிய ஊடக தார்மீக அவசியம் கருதி அக்காட்சிப் படிமத்தில் சில படங்களைத் தணிக்கை செய்து வெளியிடுகின்றோம். விரிவான செய்திகளுக்கு

Friday, December 19, 2008

திரைப்பட இயக்குனர் சீமான் மீண்டும் கைது

4 comments
இயக்குனர் சீமான் இன்று முற் பகல் இரண்டாவது தடவையாக தமிழ காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த விரிவான செய்திகள், ஆடியோ செய்தி காண