Friday, May 15, 2009

வன்னியில் இறுதிக்கட்ட போர் ஆரம்பம் - சர்வதேசமே மக்களைக் காப்பாற்ற விரையுங்கள்

0 comments

வன்னியில் சிறீலங்கா படையினர் தமது முழுப்படைக்கல சூட்டாதரவைப் பயன்படுத்தி இன்று காலை முதல் மிகக்கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். தொடர் எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு வந்த படையினர், இன்று காலை முதல் தமது முழுமையான படைக்கல சக்தியைப் பயன்படுத்தி பாதுகாப்பு வலயம் நோக்கி கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். ஆட்டிலறி எறிகணைஇ பல்குழல் எறிகணை, பீரங்கித் தாக்குதல், கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள், துப்பாக்கித் தாக்குதல் என்பவற்றின் மூலம் இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

Wednesday, May 13, 2009

தமிழ் மக்களை காப்பதற்கான துரித நடவடிக்கையில் ஒபாமா!

0 comments

சிறிலங்காவின் மோதல் பிரதேசத்தில் நடைபெறும் தொடர்ச்சியான மோதல்களினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி, மிகப்பெரிய அழிவாக மாற்றமடைய முன்னர் தடுக்க,அவசர நடவடிக்கை எடுக்கவேண்டி உள்ளது என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

தொடர்்ந்து வாசிக்க

பாதுகாப்பு சபையில் முதலாவது சம்பிரதாய விவாதம்!

0 comments
ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் பாதுகாப்பு சபையில், சிறிலங்கா விவகாரம் பற்றிய சம்பிரதாய பூர்வமான முதலாவது விவாதம் (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக ராஜதந்திரிகள் கருத்து தெரிவிக்கையில், மோதல் வலயத்தில் சிக்கியுள்ள மக்கள் பிரதேசங்கள் மீது, சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் ஷெல் தாக்குதல்களை நிறுத்துமாறு அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.ஐ.நாவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மௌரிஸ் ரிபர்ட் மற்றும் ஏணைய மேற்கத்தேய பிரதிநிதிகள், இம்மூடிய கதவு விவாதத்தினுள் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

கனடா அடங்காப் பற்று ( நேரடி ஒளிபரப்பு)

0 comments
கனடாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அடங்காப்பற்று நிகழ்வின் நேரடி ஒளிபரப்பினைக் காணலாம்
www.4tamilmedia.com
இங்கே காணலாம்.

இலங்கையில் இரத்த ஆறு ஓடும் அபாயம் இன்றிரவு ஏற்படலாம்.- சர்வதேச மன்னிப்பு சபை

0 comments

பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட 3 Km இற்கும் குறைவான பரப்பில் அகப்பட்டுள்ள கிட்டத்தட்ட 50 000 மக்கள் கனரக ஆயுதங்கள் மூலம் கொல்லப்படவும்,அதிக எண்ணிக்கையில் காயப்படுத்தப்படவும்,காயங்கள் குணப்படுத்தப்படாமல் நோயினாலும்,போசாக்கின்மையாலும் இறக்கவும் வாய்ப்புக்கள் பெருகி விட்டன என சர்வதேச மன்னிப்பு சபை குற்றஞ்சாட்டியுள்ளது. 'கடந்த சில தினங்களாக, இந்தியாவின் மிக வலுவான மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள கட்சிகள் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் கொல்லப்படுவதிலிருந்து சிறு பாதுகாப்பு வழங்கியிருந்த போதும் இன்று தேர்தல் முடிந்தவுடன் இந்த வழியும் அடைக்கப்பட்டு விடும். அத்துடன் இலங்கை அரசாங்கம் மேலும் மிக வலுவான கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்களை நடத்தத் தொடங்கும்.

தொடர்ந்து வாசிக்க

கமல் வாக்களிக்கவில்லை.கலைஞர் வாக்களித்தார.?

0 comments

தமிழகத்தில் இன்று காலை முதல் பரபரப்பாக வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தல் வாக்களிப்புக்கான பல ஆயத்தங்களும், ஏற்பாடுகளும் நேர்த்தியாகத் திட்டமிட்டிருப்பதாகத் தேர்தல் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்ட போதிலும், பல பகுதிகளிலும் வாக்கப் பதிவுகளில் குழப்பங்கள் அல்லது தாமதங்கள் நிகழ்வதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க

Tuesday, May 12, 2009

பிரித்தானியா தமிழ்மக்களின் பாராளுமன்ற முற்றுகைப் போராட்டம்.

0 comments

பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை, தமிழ் இளையோர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இளையவர்களின் கோரிக்கைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் ஆக்கபூர்வமான பதில் நடவடிக்கை உடனடியாக எடுக்கத்தவறி வருவதாகவும் கடந்த வார இறுதிப்பகுதியில் அரச படைகளின் தாக்குதல்களில் , மக்கள் உயிரிழப்புக்கள் அதிகமானதையும் கருத்திற் கொண்டு உணர்ச்சிவசப்பட்ட மக்கள் தன்னெழுச்சியாக நேற்றைய தினம் தமது போராட்டத்தினை தீவிரப்படுத்தியிருந்தனர்.

தொடர்ந்து வாசிக்க

Monday, May 11, 2009

ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இலங்கை விவகாரம்

0 comments
இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான கூட்டம் முடிந்ததும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மிலிபாண்ட்,

பிரான்ஸ் பிரதிநிதி 'பேர்னர்ட் கௌச்னே' உடன் சேர்ந்து தலைமை வகித்து ஐ.நா பாதுகாப்புச் சபையின் சர்வதேச பிரதிநிதிகளுக்காகவும், இலங்கையில் செயற் திறனுடன் உள்ள அரச சார்பற்ற மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்களுக்காகவும் நடத்திய கூட்டத்தில் பாதுகாப்புச்சபையின் 8 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து வாசிக்க

திமுகவின் தூண்டுதலா? திருமாவின் வேண்டுதலா?

1 comments

ஈழத்தமிழர்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதிப்பதில், தமிழக முதல்வருடன் போட்டி போடும் மற்றொருவராக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளன் மாறிவருவதாகத் தெரிகிறது. தமிழக அரசியற் தலைவர்களில் விடுதலைச்சிறுத்தைகளின் தவைலர் மீது மிகுந்த நேசமிக்க பல தமிழர்கள் ' இவரும் இப்படியா..? ' என முனுமுனுக்கத் தொடங்கியுள்ளார்கள்.

தேர்தலுக்காகத் திமுக காங்கிரஸ் கூட்டணியில் திருமா இணைந்ததை, தமிழகத்தில் அவரது அரசியற் தலைமைத்துவத்தின் அரசியற் தளத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு சகித்துக் கொண்டவர்கள் கூட, தொடரும் அவரது போக்கைக் கண்டு கடும் அதிருப்தியுற்று வருகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

Sunday, May 10, 2009

மக்களே! பெரியாரின் பேரன் சீமான் கேட்கின்றேன். தமிழகத்திலிருந்து காங்கிரசை விரட்டுங்கள்.

0 comments

தமிழகத் தேர்தற்களத்தின் பிரச்சாரக் களத்தில், இறுதிக்ட்டப்பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சென்னை வருகிறார். சென்னையில், திமுக தலைவர் கருணாநிதியுடன் இணைந்து. திமுக கூட்டணிக்காகப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசவுள்ளார்.

சென்னைத் தீவுத்திடலில் இன்று மாலை இப்பிரச்சாரக் கூட்டம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. சோனியாந்தியின் வருகையை முன்னிட்டு இப்பிரதேசங்களிலெல்லாம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஆயிரக் கணக்கான பொலிசார் சென்னையின் பல பாகங்களிலும் குவிக்கபட்எருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

Saturday, May 9, 2009

ஒரே இரவில் ஆயிரக் கணக்கான தமிழ்மக்கள் கொலை. நள்ளிரவில் பயங்கரம்.

0 comments
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நோக்கி சிறிலங்கா படையினா நேற்றிரவு தொடக்கம் நடத்திய உச்சகட்ட கோரத் தாக்குதலில் 1,112-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட பகுதிகளை நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு 7:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் சகலவிதமான நாசகார ஆயுதங்களையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

பாதுகாப்புவலயத்தில் 180,000 பொதுமக்கள் எஞ்சியிருக்கிறார்கள் - சிறிலங்கா இராணுவம்

0 comments

யுத்த சூனிய பிரதேசத்தில், இன்னமும் 180,000 மக்கள் எஞ்சி இருப்பதாகவும், அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இராணுவத்தினரிடம் உள்ளதாகவும், வன்னிபிராந்திய படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ளஇராணுவத்தினரின் எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாக இராணுவத்தினரின் 53,58 ஆம் படைப்பிரிவு தளபதிகளுடனும், 8 வது துரித நடவடிக்கை படைப்பிரிவின் தளபதியுடனும், வன்னி பிராந்திய படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நடாத்திய கலந்துரையாடலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதனை சிறீலங்கா தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி செய்திப்பிரிவும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து வாசிக்க

சிறிலங்காவிலிருந்து 'Channel 4' செய்தியாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்

0 comments


சிறிலங்கா இடைத்தங்கல் முகாங்களிற்குள், நடக்கும் கொடுமைகள் பற்றி உலகின் கண்களுக்கு முதலில், நேரடி அனுபவங்களை உள்ளடக்கிய காட்சித்தொகுப்பின் மூலம் கொண்டு வந்த 'Channel 4' ஊடகவியலாளர்களின் விசாவினை, சிறிலங்கா அரசு இரத்து செய்துள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க

Thursday, May 7, 2009

இனியும் இந்தத் தொலைக்காட்சிகள் உங்களுக்குத் தேவையா..?

1 comments

புலம் பெயர் தேசத்தில் வாழும் ஈழத்து உறவுகளுக்கென விழித்து, தமிழகத்திலிருந்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இம்மடலை, அம் மடலில் குறிப்பிட்டுள்ள விடயங்கள், கேட்கப்படும் கேள்விகளில் உள்ள உண்மைகள், கருதி அப்படியே தருகின்றோம். ஆயினும் சில குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களின் பெயர்களை மட்டும் தவிர்த்திருக்கின்றோம்.

அன்பான புலம் பெயர் தமிழ் உறவுகளே,

உங்கள் உறவுகளின் சோகங்களில் நிலைகுலைந்திருக்கும் உங்களிடம் இப்போது இதனைக் கேட்பது நியாயமாகாது என்பதை நன்கறிவேன். ஆனால் இதை இப்போதுதான் உங்களிடம் கேட்க வேண்டியுமுள்ளது. நாளைக்கே காட்சிகள் மாறிப் போய்விடக் கூடும். ஆனால் நியாயங்களும் உண்மைகளும் மாறிப்போய்விடாது. ஆதலால் இம் மடல் உன்னைக் கவலைக்குள்ளாக்குமாயின் மன்னித்துவிடு.

Tuesday, May 5, 2009

சோனியாகாந்தி பிரச்சார மேடையில் கலைஞர் ..?

2 comments

இன்று தமிழக்திலும், புதுவையிலும், திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய, புதுடில்லியிலிருந்து காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சென்னைக்கு வருகின்றார். முற்பகலில் டில்லியிலிருந்து விமான மூலம் சென்னைக்கு வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், புதுவைக்குச் செல்கின்றார் , பிற்பகலில் புதுவையில் நடைபெறும் தேர்தற் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பின், மீண்டும் சென்னை வந்து , மாலை யில், சென்னைத் தீவுத்திடலில் நடைபெறும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

புத்தர் போல் ஜெயலலிதாவும் திடீர் ஞானம் பெற்றாரா..? - கனிமொழி

0 comments

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார மேடைகளில், தமது கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு ஆற்றவிருக்கும் செயற்திட்டங்கள் பற்றிப் பிரச்சாரம் செய்வதற்காக நடைபெறும் பிரச்சார மேடைகள், ஒரு கட்டத்தின் பின், எதிர் போட்டியாளரைத் தாக்கிப் பேசுவதே பிரச்சாரம் என்றாகிவிட்டது. இதற்கு விதிவிலக்காக ஒருசில பேச்சாளர்கள் இருந்தார்கள். அவர்களில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞரின் மகளுமாகிய கனிமொழியும் ஒருவர். ஆனால் தற்போது அவரும் எதிர்த் தாக்குதல் பிரச்சாரத்தில் குதித்துவிட்டது போல் தெரிகிறது. திருவொற்றியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், போதிமரத்து புத்தர்போல் ஈழத்தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு திடீர் ஞானோதயம் வந்துள்ளமை ஆச்சரியமானது. ஆனால் அது வெறும் தேர்தற்கால அக்கறைதான். தேர்தல் முடிந்ததும் ஈழத்தமிழர் பிரச்சினையை அவர் மறந்து விடுவார் எனக் குறிப்பிட்டார்.
மேலும் வாசிக்க

அரசிற்கும் அராஜக கும்பலுக்கும் தொடர்பா? - AHRC

0 comments

இலங்கையில் வன்செயல்களில் ஈடுபட்டு வரும் வரும் அராஜக கும்பல்களையும் ஒட்டுக்குழுக்களையும் அடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆசிய மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.'அண்மையில் மட்டக்களப்பில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சதீஷ்குமார் தினுஷ்காவின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய கும்பல், அவருடைய குடும்பத்தாரிடம் 3 மில்லியன் ரூபாய்க்கு பேரம் பேசியுள்ளனர். கடத்தப்பட்டதாக தகவல் அறிந்தும், தொடர்புடைய குழுவினர் உடனடியாக செய்யப்படவில்லை,இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் பல குற்றங்களை புரிந்து வருபவர்கள்,' என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

தமிழகத்துக்குச் சோனியா வருகையும், எதிர்ப்பும்

0 comments

தேர்தலுக்குரிய நாள் நெருங்க நெருங்க, தேர்தற் களம் சூடுபிடிப்பது ஒன்றும் புதிதல்ல. ஆயினும் தமிழ் நாட்டில் தேர்தலிலும் பார்க்க, தேர்தல் பிரச்சாரத்திற்காகக, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தமிழகம் வரும் நாளாகிய நாளை (06.05.09) பரபரப்புக்குரிய நாளாக இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில்ஆகிய இடங்களிலுள்ள 40 ம‌க்களவை‌த் தொகுதிக‌ளி‌ல் போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுவதற்காக, காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி நாளை தமிழகம் வருகிறார். நாளையே புதுச்சேரியிலும், சென்னையிலும் பேசவுள்ளதாகவும் தெரிவிக்க்கப்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க

Monday, May 4, 2009

மக்களால் மக்களுக்காக மலர்ந்த கிழக்கின்..

0 comments

மக்களால் மக்களுக்காக மலர்ந்த கிழக்கின் உதயத்தில் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். மாதம் மும்மாரி பொழிகிறது. தேனும் பாலும் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகின்றது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களே! நீங்கள் தப்பி வந்துவிடுங்கள் என்று வான்வழியே வன்னி மக்களுக்கும், வருகின்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும், வசனமொழியாகவும், வாய்மொழியாகவும் எடுத்துவீசப்படுகின்றது. அரச ஊடகங்களும், அதற்கொப்பாக மாற்றப்பட்ட ஊடகங்களும், மலர்ந்துவிட்டது ' மஹிந்த சிந்தனையில் ' புது வாழ்வு என எக்காளமிடுகின்றன.
தொடர்ந்து வாசிக்க

Sunday, May 3, 2009

இறந்த குழந்தையைக் கடலில் வீசினோம். - கடற்பயங்கரத்தில் தப்பிய தாய்

0 comments

யுத்த உயிராபத்துக்களில் இருந்து தற்காத்துக்கொள்ள வேறு வழியில்லாது, முல்லை தீவில் இருந்து படகுகளின் வழியாக இராமேஸ்வரம் நோக்கி புறப்பட்ட பல குடும்பங்களை சேர்ந்த 10 பேர் நடுக்கடலில் படகுடன் திசை தெரியாது தத்தளித்த போது, ஆந்திர பிரதேசத்தின் காக்கிநடா பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல சிரமங்களுக்கு மத்தியில் 10 நாட்களுக்கும் மேலாக நடுக்கடலில், உணவு இன்றி, குடிநீர் இன்றி இப்படகில் சென்ற 21 பேர்களில் 11 பேர் நடுக்கடலில் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க