Pages

Friday, January 30, 2009

முத்துக்குமரனுக்கு அஞ்சலி செலுத்த இருபதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் வீடியோ இணைப்பு

ஈழத்தமிழர் பிரச்சனையில், இந்திய மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, சென்னையிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களின் முன்பாக, தீக்குளித்து மரணமான முத்துக்குமரனுக்கு அஞ்சலி செலுத்த, தமிழகத்தின் பல பகுதிகளிலுமிருந்து இருபதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள் சென்னை கொளத்தூருக்கு வந்த வண்ணமிருப்பதாகத் தெரிகிறது.

மாணவர்கள், இளைஞர்கள், அலுவலகர்கள் எனபல்வேறு தரப்பினரும் குழுக்களாக வந்து குவிந்த வண்ணமிருப்பதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அங்கிருந்து எமது செய்தியாளர் சற்று முன் வழங்கிய ஒலிவழிச் செய்தி மற்றும் காணொளி இணைப்பு

Thursday, January 29, 2009

முத்துக்குமாரைக் கொன்றவர்கள்


ஈழத்தமிழருக்கு இழைக்கப்படும் இன்னல்களுக்குத் துணைபோகும், இந்திய மத்திய அரசைக் கண்டித்து, மாநில அரசின் தலைமையை விமர்சித்து , தீக்குளித்து மடிந்து போயிருக்கின்றான் தமிழகத்து இளைஞன் முத்துக்குமார். பொதுப்படையாகப் பார்க்கும் போது, இது ஏதோ உணர்ச்சி மேலீட்டால் நிகழ்ந்தது போலவும், ஈழத்தமிழர்கள் மீதான பெரு விருப்பின் பேரால் நிகழ்ந்தது போலத் தென்னபட்டாலும், தீக்குளித்த இளைஞன் முத்துக்குமார் தன் மரணத்தின் பெறுமதியை உணர்த்தும் வகையில், மரணசாசனமாக அறிக்கையொன்றினை விட்டுச் சென்றிருக்கின்றான். தொடர்ந்து வாசிக்க

என்னைவிடப்புத்தி கூர்மையுள்ள ஈழத்துக் குழந்தைகளின் மரணத்தின் முன் என் மரணம் துச்சம்" - தீக்குளித்த முத்துக்குமாரின் மரண வாக்கு மூலம்

" என்னைவிடப் புத்திகூர்மையுடைய எத்தனையோ ஈழத்தமிழ்க்குழத்தைகளின் பரிதாபமான மரணத்தின் முன் எனது மரணம் துச்சம் " என ஈழத்தமிழர் பிரச்சினைக்காக சென்னையில் ராஸ் பவனுக்கு முன் தீக்குளித்த தூத்துக்குடி இளைஞர், இறப்பதற்கு முன் வைத்தியர்களிடம் அளித்த மரணவாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.

அங்கே உருக்மான வேண்டுகோள் விடுத்த திரு. வை.கோ அவர்களின் உரையின் ஒலிவடிவை இங்கே கேட்கலாம்.

Wednesday, January 21, 2009

வன்னி வான் பரப்பில் சிறிலங்கா விமானப்படை விமானம் சுடப்பட்டது ?


இலங்கை விமானப்படையினரின் மிக் வைற்றர் ஜெட் ரக போர் விமானம் ஒன்று இன்று புதன்கிழமை வன்னிப் போர்முனையில் பறப்பில் ஈடுபட்டிருந்த சமயம் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் உள்ள வன்னிபடைத் தலைமையகத்தை மேற்கோள் காட்டி, வன்னி வான்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தரப்பு இது தொடர்பாக எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது, மூன்று விமானப்படையினர் விமானத்தில் இருந்துள்ளனர் எனவும், இரஷ்யத் தயாரிப்பான இந்த குண்டு வீச்சு விமானம் , லேசர் கருவி வசதி, ரொக்கட், ஏவுகணைகள் மற்றும் பல்வகைப்பட்ட பெருந்தொகையான குண்டுகளையும் எடுத்துச் செல்லக்கூடிய வசதியும் மிக்கது.


விடுதலைப்புலிகளின் இலக்குகள் எனச் சொல்லிக்கொண்டு, வன்னியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீது் நடத்தப்பட்ட தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுவீச்சுகள் இந்த விமானத்தின் மூலமே நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இச் செய்தி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை .


மேலும் செய்திகளுக்கு

Sunday, January 18, 2009

தொல். திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்ட நிறைவுரை - ஒலிவடிவம்


விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் இலங்கையில் போர்நிறுத்தம் செய்து, தமிழ்மக்களைக் காப்பாற் வகைசெய்யுமாறு, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இந்திய மத்திய அரசைக் கோரி நடாத்திய சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை, விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள், அரசியற் கட்சித் தலைவர்கள், கேட்டுக்கொண்டதற்கமைவாக 18.01.09 ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தார்.

போராட்டத்தை நிறைவு செய்ய முன் விரிவான ஒரு உரையில் தன்போராட்டத்தின் நோக்கம், நிறைவு, நீட்சி என்பன பற்றி விரிவாகப் பேசினார். அவரது முழு உரையின் ஒலிவடிவம்.

தொல். திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்தார்.

(ஆடியோச் செய்தி இணைக்கப்பட்டுள்ளது) சென்னை மறைமலைநகரில் கடந்த நான்கு தினங்களாக, ஈழத்தமிழர்களைப்பாதுகாக்க இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்துமாறு, இந்திய மத்திய அரசைக்கோரி, நடாத்தி வந்த உண்ணாநிலைப்போராட்டத்தினை, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ்,

எமது செய்தியாளர் வழங்கும் ஒலிவழிச் செய்தி:

திருமாவளவன் உண்ணாநிலைப்போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது


(ஆடியோச் செய்தி இணைக்கப்பட்டுள்ளது) சிறிலங்கா அரச படைகளின் வல்வளைப்புக்குள்ளாகியிருக்கும், தமிழமக்களின் உயிர் காக்க வேண்டி, போரை உடன் நிறுத்தக் கோரி 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனின் உடல்நிலையில் சற்று சோர்வு காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 15ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய அவர் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார்.

இன்று காலை அவர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டதாகவும், பேண்ட், சட்டை உடையிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த அவர் நாற்காலியில் சோர்வோடு அமர்ந்திருக்கவும் காணப்பட்டதாகத் தெரியவருகிறது. வைத்தியர்கள் அவ்வப்போது, அவரது உடல்நிலையைப் பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய்விட்டதால் அவருக்கு மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டு வருவதாகவும், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துவதால் வயிற்று புரட்டலும் ஏற்பட்டு வருவதாகவும், வைத்தியர்கள் தெரிவி்க்கின்றனர்.

இந்நிலையில் முதலுதவிக்குழுவொன்றும், அம்புலன்ஸ் வண்டியொன்றும், வைத்தியர் குழுவும், தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது, திருமாவளவனின் தாயார் பெரியம்மா, தம்பி செங்குட்டுவன் ஆகியோரும் உண்ணாவிரத மேடையில் அவர் அருகிலேயே இருந்து கவனித்து வருகின்றனர்.

ஓடியோ செய்தி

Saturday, January 3, 2009

அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல்


கிளிநொச்சிக்குள் சிறிலங்கா இராணுவம் பிரவேசித்திருப்பது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களிடையே பலமான அதிர்வினை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத் தமிழர் போராட்டத்தின் நீள் நிலைப்போராட்டத்தினைத் தெரிந்தவர்கள் இதுவும் கடந்து போகும் என்றிருக்கின்றார்கள். போர்க்களத்தின் போராளிகள் வீழோம் , வெல்வோம் என உறுதிப்படச் சொல்கின்றார்கள் ..அத்தகைய உறுதியின் குரல் வரும் கவிவரிகள்....

ஓடியோ இணைப்பு