
தமிழகத்தில் சென்ற தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றுக்கொள்ளாவிடினும், திமுக, அதிமுக, ஆகிய இரு கட்சிகளினும் பல்லாயிரக் கணக்கான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளுமளவிற்குத் தேறியிருந்தது. இது திமுக, அதிமுக, ஆகிய இரு கட்சிகளினாலும் துன்பப்பட்ட மக்கள் தேடிய புதிய விருப்பத்தில் தேமுதிகவிற்குக் கிடைத்த வாக்குக்களாகவும் இருக்கலாம். அல்லது விஜய்காந்தின் பிரச்சாரத்திற்குக் கிடைத்த வெற்றியாகவும் இருக்கலாம். எதுவாயினும், தேமுதிகவின் இந்த வெற்றி குறித்து திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், ஆகிய பெருங்கட்சிகள் அப்போது பெரிதும் அலட்டிக் கொள்ளாத மாதிரி நடந்த போதும், அவர்களின் அடிவயிற்றில் கிலிகொள்ள வைத்ததென்னவோ உண்மைதான்.
அதனாற்தான் இம்முறை தேர்தலில் விஜய்காந்தின் தேமுதிகவினைத் தங்கள் கூட்டுக்களிலல் சேர்த்துக் கொள்ள அனைத்துக் கட்சிகளும் ஆர்வம் கொண்டிருந்தன.
தொடர்ந்து வாசிக்க
vilunthara illaiya ena ippo sollamudiyathu
ReplyDelete