Pages

Thursday, July 9, 2009

தமிழ் மக்கள் உயிரிழப்புக்கள் பொய்யானவை - தடுத்து வைக்கப்பட்ட வன்னி வைத்தியர்கள்


விடுதலைப்புலிகளின் கடுமையான அழுத்தங்களாலேயே தமிழ் மக்கள் உயிரிழப்புக்கள் பற்றிய பொய்யான தகவல்களை வழங்கியதாக, யுத்த வலயத்தில் கடமையாற்றிய வன்னி வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாதகாலமாக குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் இன்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய வன்னி மருத்துவர்கள் இளஞ்செழியன், சண்முகராஜா, சத்தியமூர்த்தி, சிவபாலன், வரதராஜன் ஆகியோர் பாதுகாப்பு தரப்பினரின் கண்காணிப்பிற்கும், பிரசன்னத்திற்கும் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே இதனை கூறியுள்ளனர்.

விடுதலை புலிகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் பணியாற்ற நேர்ந்ததாகவும், அவர்கள் தந்த விபரங்களையே கூறியதாகவும் கூறும் நீங்கள் இராணுவத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் தற்போது கருத்து வெளியிடுகின்றீர்கள். இதில் எந்தளவிற்கு உண்மை தன்மை காணப்படுகிறது என ஊடகவியலாளர்

தொடர்ந்து வாசிக்க...


No comments:

Post a Comment