Pages

Tuesday, September 29, 2009

சிறிலங்காவின் பிரதம நீதியரசர்களை ஆளும் தரப்பு மகிழ்ச்சிப்படுத்தும் விதம்?

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இசுரு பாலபட்டபந்தி நெதர்லாந்தின் இலங்கைத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவை மாத்திரமல்லாது நீதியரசர் ஜகத் பாலபட்டபந்தி ஆகிய இருவரையுமே மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக நீதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர் நீதிமன்ற நீதியரசர் ஜகத் பாலபட்டபந்தியின் மகனான இசுரு பாலபட்டபெந்தி, பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் மகளையே மணம்முடித்துள்ளார். அசோக டி சில்வாவின் மகள் தற்போது நெதர்லாந்தில் உயர் கல்வி பயின்று வருவதனால் அவரது கணவரான இசுரு பாலபட்டபெந்தியை நெதர்லாந்திற்கு அனுப்ப ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில், நெதர்லாந்தில் கல்விபயின்றுவரும் நீதியரசின் மகளுக்கு, தனது கணவரான இசுரு பாலபட்டபெந்தியுடன் இலங்கை அரசாங்கத்தின் செலவில் வாழக்கூடிய அதிர்ஸ்டம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் வசிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் செலவில் நெதர்லாந்தில் சொகுசு வீடொன்றைப் பெற்றுக்கொடுக்கவும் வெளி

தொடர்ந்து வாசிக்க...

இலங்கையில் இந்திய விமானி கொலை ?



இலங்கை விமான சேவைகள் நிறுவனம் ஒன்றில் விமானியாக பணியாற்றிய இந்திய நாட்டவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் நீர்கொழும்பில் அவர் வசித்து வந்த வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

தொடர்ந்து வாசிக்க

சிங்கப்பூரில் பிரமாண்டமான "Formula 1" கார்ப்பந்தயம்! - ஒரு சூடான பார்வை!

நாட்டோட நிலப்பரப்புல சுள்ளானா இருந்தாலும் எதை வேணா எங்க நாட்டுல சும்மா கில்லி மாதிரி சாதித்து காட்டுவோம், எங்களால நடத்த முடியாத நிகழ்ச்சி எதுவுமில்லை என்று தற்போது இரண்டாவது முறையாக அசத்தலாக Fourmula 1 கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது சிங்கப்பூர் அரசு.

சிங்கப்பூர் மிகவும் குட்டி நாடு சுருக்கமா சொல்லப்போனா நம்ம சென்னையை விட ரொம்ப குட்டி, மொத்தமே கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் சுற்றளவு தான். ஆனால் அவர்கள் இந்த சிறிய இடத்தில் கொடுக்கும் வசதி பெரிய நாடுகளையே வாயை பிளக்க வைக்கும்..

எப்படியா! இந்த மாதிரி குட்டி இடத்தை (தொடர்ந்து வாசிக்க...)

செல்லுபடியற்றதாகும் சரத் என் சில்வாவின் நீதிமன்ற தீர்ப்புக்கள்!

அமைச்சுப்பதவி வகிக்க கூடாது என சத்தியக்கடிதமும், மீண்டும் அமைச்சுப்பொறுப்பும்!

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது நிதியமைச்சின் செயலாளர் சுமித் அபேசிங்கவின் பதவிக்காலத்தை 2010ம் ஆண்டு செப்டம்பர் வரையில் நீடித்துள்ள நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று பிற்பகல் உடனடியாக அமுலுக்கு

வரும்வகையில் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவை நிதியமைச்சின் செயலாளராக நியமித்துள்ளார்.


தொடர்ந்து வாசிக்க...

தமிழக அரசின் திரைப்பட விருது அறிவிப்பு - ரஜினி - கமல் தேர்வு!

தமிழக அரசு சிறந்த நடிகர்களாக ரஜியும், கமலையும் தேர்வு செய்துள்ளது. அதே போன்று சிறந்த நடிகையாக ஜோதிகாவையும், சினேகாவையும் தேர்வு செய்துள்ளது. 2007, 2008 -ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு, திரைப்பட விருதுகளுக்கான பரிந்துரைகளை வழங்க நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு விருதுகளுக்கான விபரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க....

Monday, September 28, 2009

மலேசிய இந்தியர்களின் புதிய கட்சி இன்று தொடக்கம்!

மலேசியாவில் 'மக்கள் சக்தி மலேசியா' எனும் புதிய கட்சி, இந்திய வம்சாவளியினரால் இன்று தொடங்கப்படுகிறது. இதனை ஆளும் கட்சியினதும், தலைவரும், மலேசியாவின் பிரதமருமான நஜிப் ரசாக் தொடங்கி வைத்தார்.

இதனால் இது வரை மலேசிய இந்தியர்களுக்கென இருந்த ஒரே ஒரு கட்சியான மலேசிய இந்திய காங்கிரஸ் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிய வருகிறது. இதுவரை ஆளும் கட்சிக்கு ஆதரவாக ம.இ.கா செயற்பட்டு வந்த மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா), இறுதியாக நடைபெற்ற தேர்தலில்ரும் பின்னடைவை சந்தித்திருந்தது. அதன் தலைவர் டத்தோ சிறீ சாமிவேலுவுக்கும் மக்களிடம் செல்வாக்கு குறைந்து காணப்பட்டது. ஹிண்ட்ராப் குழுவினர், மலேசிய இந்திய மக்களிடம் கொண்டு வந்த வித்தியாசமான சிந்தனையே, ம.இ.காவின் பின்னடைவுக்கு காரணம் என கூறப்பட்டது.

தற்போது, ஆளும் தரப்பே மற்றுமொரு....

தொடர்ந்து வாசிக்க....

இனிக்கும் இலக்கியம் - பகுதி 4

இனிக்கும் இலக்கியம் ஒலிப்பத்தியில், இனிப்பாக இவ்வாரம் வரும் இலக்கியம் , ஒரு குறுந்தொகைப்பாடல். இணைந்து வருகிறது அதையொட்டிய ஒரு திரையிசைப் பாடல்.

கேளுங்க.. இரசியுங்க.. உங்க கருத்துக்களையும் மறக்காமச் சொல்லுங்க

தொடர்ந்து வாசிக்க...

திருமா! கலைஞருடன் இருப்பது நியாயமா? - தமிழருவி மணியன்



ஒரு தடவைபோகும் உயிர், தமிழுக்காகப் போகடடும் என, இன்னும் எத்தனை தடவை சொல்வார் கலைஞர் எனக் கேள்வி எழுப்பிய தமிழருவி மணியன் இலண்டனில் நடைபெற்ற 'காற்றுவெளிக் கிராமம்' நிகழ்வில், உரையாற்றிய அவர், தனது உரையில், அதே அரங்கில் உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் மீதும், நேரிடையான விமர்சனங்களை வைத்து உரையாற்றியதாகத் தெரிய வருகிறது.

தொடர்ந்து வாசிக்கவும் கேட்கவும்

150 மில்லியன் டொலர்களுக்காக நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டேன் - மகிந்த ராஜபக்ச

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகை சிறிலங்காவுக்கு கிடைக்கப்பெறுமா என்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகிறது.
இவ்வரிச்சலுகையினை எவ்வாறெரினும் பெற்றுக்கொள்ள வேண்டும் என முனைப்பு காட்டிவரும் போதும், இது கிடைக்கவேண்டுமாயின் ஐரோப்பிய ஒன்றியத்தின் சில விதிமுறைகளை பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அரசு தரப்பு.

ஆனால் இவ்விதிமுறைகள், அரசின் போக்கிற்கு முட்டுக்கட்டையாக விளங்கும் என்பதால், வரிச்சலுகையை பெற்றுக்கொள்ளவும் மறுத்துவருகிறது.

இந்நிலையில் ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகை, சிறிலங்காவுக்கு கிடைக்கவிடாமல், எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்கவே தடுக்கிறார் எனவும், இதற்கெதிராக பிரச்சாரங்களும் மேற்கொண்டு வருகிறார் எனவும்,ஆளும் தரப்....

தொடர்ந்து வாசிக்க.....

Saturday, September 26, 2009

பதவியை இராஜினமா செய்ய பொன்சேகா ஆவேசம் - சமாதானப்படுத்தினர் தேரர்தர்கள்!

கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா அந்தப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்து, அதற்கான ,ராஜினாமாக் கடிதத்தை கடந்த 25ம் திகதி முற்பகல் ஜனாதிபதியிடம் கையளிக்கத் தயாராகியிருந்தார். எனினும், மாநாயக்கத் தேர்கள் சிலர் வழங்கிய அறிவுரைகளையடுத்து அவர் அந்தத் தீர்மானத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டுள்ள மிகவும் குறைந்த அதிகாரங்களுடனான பெயரளவிலான பொறுப்புக்களுக்குக்கூட இடையூறுகளை ஏற்படுத்தி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்சவினால் தொடர்ந்தும் மேற்கொண்டுவரும் முரணான நடவடிக்கைகளைப் பொறுக்க முடியாத நிலையிலேயே சரத் பொன்சேகா பதவியிலிருந்து விலகத் தீர்மானத்ததாகத் தெரியவருகிறது.

தொடர்ந்து வாசிக்க...

Friday, September 25, 2009

கருணாநிதி, மத்திய அரசுக்கு இதுவரை 30 கடிதங்கள்! - டாக்டர் இராமதாஸ்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.பாலாற்றை காக்க நடைபெற்ற மும்முனை போராட்டத்தில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார் . அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை, நதிநீர் பிரச்னை தமிழக மக்களின் பிரச்னைகள் குறித்து முதல்வர் கருணாநிதி , மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டு இருப்பதாக சொல்கின்றார்.

கடந்த மூன்றாண்டுகளில் இது போல 30 க்கும் மேற்பட்ட கடிதங்களை கருணாநிதி எழுதி விட்டார். இந்த கடிதங்கள் எழுதி இது வரை அவர் என்ன சாதித்ததுள்ளார் என்பதை விளக்க வேண்டும்.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெயராம் ரமேஷ், மக்களவைத் தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் நின்று வெற்றி பெற்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக உள்ளார்.

தொடர்ந்து வாசிக்க....

உலகத்தமிழர்கள் துயர் துடைக்க என்ன செய்தார் கருணாநிதி? - ஜெயலிதா

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில், ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடு வருகிற 2010 ஜனவரி மாதம் நடைபெறுவதற்கு, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

உலகத்தமிழ் மாநாட்டினை கொண்டாடும் சூழ்நிலையிலா தமிழ் மக்கள் இருக்கிறார்கள்? 1966 ஆம் ஆண்டு முதல் உலக மாநாட்டை நடத்திய மலேசிய தமிழர்கள் இன்று, இரண்டாம் தர குடிமக்களாக தரம் தாழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத்தமிழ் மாநாட்டை நடத்திய இலங்கைத்தமிழர்கள், இன்று சொந்த மண்ணிலே அகதிகளாக, முகாம்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை நடைபெற்ற அனைத்து உலகத்தமிழர் மாநாடுகளும், சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டன.ஆனால், கருணாநிதியின், உலகத்தமிழ் மாநாடு அறிவிப்பில், சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் குறித்து எந்தவித தகவலும் இல்லை.தன்னிச்சியாக இந்த மாநாடு நடத்தப்படுமாயின், 9 வதி உலகத்தமிழ் மாநாடு என்ற தகுதியை அந்த மாநாடு பெறமுடியாது.

மாற்றாள் கணவனா? - நயன் தராவை எதிர்த்து பெண்பாதுகாப்பு சங்கங்கள் போர்கொடி!

நடிகர் பிரபுதேவாவின், மனைவி ரம்லத்தின் பிரச்சினை தமிழகத்தில் உள்ள மாதர் சங்கங்களின் பிரச்சினையாக மாறிவிட்டது.அவருக்கு பக்கத்துணையாக இருக்க எல்லா மகளீர் அமைப்புக்களும் முடிவு செய்துள்ளன.
பிரபுதேவாவுடனான தொடர்பை முறிக்காவிட்டால் நடிகை நயந்தராவுக்கு எதிராக போராட்டத்தில் குதிப்போம், அவர் நடித்த படங்களை திரையிட அனுமதிக்க மோட்டோம். அவருடைய படங்கள் ஓடும் எல்லா தியேட்டர்கள் முன்னால் முற்றுகை ஆர்ப்பாட்டம் செய்வோம் என மாதர் சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.

சமீபகாலமாக பிரபுதேவா, தனது மனைவி ரம்லத்தினையும், இரு பிள்ளைகளையும் விட்டு பிரிந்து நயன்தராவினை திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஊடகங்களில்

தொடர்ந்து வாசிக்க...

ஐ.நாவின் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு!

ஐ.நாவின் 64 வது பொதுக்கூட்டம் நியுயோர்க்கில் ஆரம்பமாகி,நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதன் போது, அணு ஆயுத பரவல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்து நாடுகளுக்கும் இடையே ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டு, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் படி கோரப்பட்டது. இதற்கும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ஐ.நாவின் பொதுக்கூட்டத்தில் எட்டப்பட்டுள்ள ஒரு முக்கிய விடயமாகும். எனினும், இத்தீர்மானத்திற்கு கையெழுத்திட இந்தியா மட்டும்


தொடர்ந்து வாசிக்க...

Thursday, September 24, 2009

நடிகை சினேகாவிடம் சில்மிஷம் - நிதி நிறுவன அதிபருக்கு தர்ம அடி !

கடந்த சில காலமாக நடிகை சினேகா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். சர்ச்சைகள் ஓய்தாலும் நடிகை சினேகா ஓயமாட்டார் போல. திருச்சி சின்னகடை வீதியில் பிரபல நகை கடை ஒன்று உள்ளது. இதன் 2-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் புன்னகை புகழ் நடிகை சினேகா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து வாசிக்க...

சென்னையை இரண்டு மண்டலமாக பிரிக்கப்படும் - மு.க.ஸ்டாலின் தகவல் !

இரண்டு மண்டலங்களாக பிரிக்கும் பணி விரைவில் துவங்கும் என தமிழக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சி மூலம் கட்டப்பட்டு வரும் மேம் பாலப் பணியினை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது சென்னை மாநகராட்சி மூலம் டர்ன்புல்ஸ் சாலை செனடாப் சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 12.2.2009 அன்று தொடங்கப்பட்டது. ரூ.19.93 கோடி செலவில் இந்த மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த பாலப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த மேம்பாலத்தை முதலமைச்சர் கருணாநிதி அடுத்த மாதம் அக்டோபர் மாதம் திறந்து வைக்க உள்ளார்.

தொடர்ந்து வாசிக்க..

'லட்சுமி, கணேஷ், கிருஷ்ணா பலராம்' - ஜூலியா ரொபர்ட்ஸின் குழந்தைகள் பெயர்கள் PDF

உலக புகழ் பெற்ற ஆங்கில நடிகை ஜுலியா ராபர்ட்ஸ் அரியானா மாநிலம் பட்டோடியில் உள்ள ஹரி மந்திர் ஆசிரமத்தில் நடைபெறும் ஆங்கில படப்பிடிப்புக்காக வந்துள்ளார். அவருடைய 3 குழந்தைகளும் உடன் வந்துள்ளனர். ஆசிரமத்தின் அருகே நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கும் ஜுலியா, ஹரி மந்திர் ஆசிரமத்தின் தலைவரான சுவாமி தரம் தேவை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது ஜுலியாவின் 3 குழந்தைகளுக்கும் ஏற்கனவே உள்ள ஆங்கில பெயர்களுக்கு பதிலாக இந்து கடவுள்களின் பெயரை சுவாமி தரம்தேவ் சூட்டினார்.

தொடர்ந்து வாசிக்க...

நளினியை விடுதலை செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல் !

தமிழக சிறைகளில் இருந்த கைதிகளை விடுவித்தது போன்று வேலூர் சிறையில் உள்ள நளினி, ராபர்ட் பயஸ் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டுமென்று ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.
இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் கூறியிருப்பதாவது

வேலூர் மத்திய சிறையில், 18 ஆண்டுகளாக வாடிகிடக்கும் ராபர்ட் பயஸ், நளினி ஆகியோர், தங்களை விடுவிக்கக் கோரி காலவரையற்ற உண்ணா நிலை அறப்போர் மேற்கொண்டு உள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க....

Wednesday, September 23, 2009

தமிழ்வாணிக்கு தங்குமிட வசதிசெய்த வீட்டினர், சிறிலங்கா அரசினால் கைது

வவுனியா தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி லண்டன் சென்ற தமிழ்வாணி ஞானகுமார் லண்டன் கார்டியன் பத்திரிகைக்கு நேர்காணல் வழங்கியிருந்தார். இதன்மூலம் இந்த உண்மைத் தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியதால் இலங்கை அரசாங்கம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தது. இந்நிலை தொடர்வதைத் தடுக்கும் நோக்கில் தமிழ்வாணி ஞானகுமாருக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய வீட்டார் அனைவரையும் பாதுகாப்புத் தரப்பினர் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க....

Tuesday, September 22, 2009

வெளிநாட்டில் மருத்துவ படிப்பு முடித்தாலும் இந்தியாவில் தேர்வு - உச்சநீதிமன்றம்


வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் டாக்டராக பணிபுரிய வேண்டும் என்றால் இந்திய மருத்துவ கவுன்சிலின் தேர்வை அவசியம் எழுத வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நேபாளம் மற்றும் ரஷ்யாவில் மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர்களின் தரத்தில் குறைபாடு இருப்பதாக கூறி இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2002 மார்ச் 15 ம் தேதி தேர்வு ஒன்றை நடத்த திட்டமிட்டது.

இதை எதிர்த்து நேபாள மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், பஞ்சல் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்

தொடர்ந்து வாசிக்க...

பழம்பெரும் தமிழ் நடிகை எஸ். வரலட்சுமி மறைவு !



பழம்பெரும் திரைப்பட நடிகை எஸ். வரலட்சுமி சென்னையில் காலமானார்.பழம்பெரும் திரைப்பட நடிகை எஸ். வரலட்சுமி . இவர் 1938 -ம் ஆண்டு கே. சுப்பிரமணியம் ( நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த சேவாசதனம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.


மேலும் செய்திகளுக்கு

பிரபல கிரிக்கெட் வீரர் சித்துவை காணவில்லை - காவல் நிலையத்தில் புகார் !



அமிர்தசரஸ் தொகுதிக்கு நீண்ட நாட்களாக வராத தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் சித்துவை காணவில்லை என காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அமிர்தசரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் சித்து. இவர் தனது தொகுதி பக்கம் வருவதில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.


தொடர்ந்து வாசிக்க

சேனல் 4 வீடியோ-புதுடில்லி மௌனமெனின்-உலக கவனத்திற்கு போராட்டம் - ஜெயலிதா ஆவேசம்


கண்கள் கட்டப்பட்ட நிலையில், ஆடைகள் களையப்பட்டு, சிறிலங்கா சிங்கள இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படும் தமிழ் இளைஞர்கள் பற்றிய காட்சிகள் அடங்கிய காணொலிக்கு, இது வரை தமிழக அரசிற் கட்சிகள் தமது எதிர்ப்பை தெரிவிக்காதது வியப்பை தருகிறது என அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளர். இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை ஜெயலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கைத் தமிழர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறையில் நடத்தப்படுவது தொடர்பாக இந்தியா, அய‌ல் நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில்

தொடர்ந்து வாசிக்க...

கனடாத் தமிழர்களிடையே மலரும் கருத்துச் சுதந்திரம்..?

கனடா ரொறன்ரோ நகரில் நாடுகடந்த தமிழீழம் தொடர்பான ஆய்வு கூட்டம் ஒன்று கனடா கந்தசுவாமி கோயில் ஆலய மண்டபத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது. இக் கூட்டம் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இக் கூட்டத்திற்கு சென்றிருந்த புளொட் அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர், கனடா ஜனநாயக மக்கள் முன்னணி எனும் அமைப்பின் பெயரில், 'நாடு கடந்த தமிழீழம் தாயக உறவுகளின் துயரினை போக்குமா?' என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் ஒன்றை அங்கு விநியோகிக்க முயன்றார்கள்.

இதன்போது கூட்டத்தினை ஏற்பாடு செய்தவர்கள், மேற்படி கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை குழப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு புளொட் உறுப்பினர்கள், தாங்களும் ஜனநாயக முறையில் தமது கருத்துக்களை மக்க....

தொடர்ந்து வாசிக்க...

காங்கேசன் துறைமுகம் இந்தியாவின் கரங்களில்

இந்துசமுத்திரத்தில் கேந்திர நிலையங்களில் அமைந்துள்ள துறைமுகங்களில் ஒன்றான காங்கேசன் துறைமுகத்தை புதுப்பித்து அமைக்கும் பொறுப்பை இந்தியாவிடம் கையளிக்க இலங்கை அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. அதன் தொடக்கமாக துறைமுகம் எவ்வாறு புனருத்தாரணம் செய்யப்பட வேண்டும் என இலங்கை விரும்புகிறது, எதிர்பார்க்கிறது என்பது குறித்த நீண்ட அறிக்கையை இலங்கை துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகாரசபை திட்ட வரைவு ஒன்றை, விரிவான அறிக்கை ஒன்றை இந்தியாவிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கை அண்மையில் கொழும்பிலுள்ள இந்தியத்தூதரக அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.

1995 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளிடம் இருந்து அரச படைகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதிலிருந்து காங்கேசன்துறைமுகப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கு படையினர் நிறைந்து காணப்படுகின்றனர்.

காங்கேசன் துறைமுகம் தென்னிந்தியாவுக்கு மிகச் சமீபமாக இருப்பதால் இந்தியாவுக்கும் கேந்திரமாகவும் மிகவும் வேண்டியதாகவும் அமைந்துள்ளது என்று "ஹிந்துஸ்தான் ரைம்ஸ்" பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க...

Monday, September 21, 2009

மண்டபம் பகுதி மீனவர்களின் ஆடைகளை களைய சொல்லி, சிறிலங்கா கடற்படை அட்டூழியம்?,

மண்டபம் பகுதி மீனவர்களிடம், ஆடைகளைக் களையச் சொல்லி, அவமானப்படுத்தியதோடு அவர்கள் பிடித்து வைத்திருந்த இறால்களையும் கடற்படையினர் பறித்துச் சென்றுள்ளனர் என மீனவர்கள் முறைப்பாடு தெவித்துள்ளனர். முறைப்பாட்டில் அவர்கள் மேலும் தெவித்திருப்பதாவது
மண்டபம் வடக்கு கடல் பகுதியிலிருந்து 424 விசைப்படகுகளில் வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அங்கு ஐந்து பைபர் படகில் வந்த கடற் படையினர், மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் மீனவர்களிடம் ஆடைகளைக் களையச் சொல்லி உள்ளாடையுடன் அமரவைத்து, சுற்றிநின்று தாக்கினர். அத்தோடு எங்கள் படகையும் பாம்பன் படகையும் சிறைப்பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து வாசிக்க...

சமானத்துக்கான விட்டுக் கொடுப்புக்கள்



இன்று இரண்டு முக்கிய தினங்கள்.

இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாள், சர்வதேச சமாதான தினம். இரண்டும் வெவ்வேறு தளநிலைகளைக் கொண்டிருந்தாலும், அடிப்படையில் ஒன்றெனலாம். மனித நேயம் என்பதனை வலியுறுத்தும் வகையில் அவை இரண்டுக்குமான ஒருங்கு நிலை தோன்றுகிறது.


தொடர்ந்து வாசிக்க

Sunday, September 20, 2009

தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம் - டாக்டர் சேதுராமன் அறிவிப்பு !

தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பெருக தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென்மாநில இயக்க கருத்தரங்கில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் கலந்து கொண்டார். பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது

தேசியத்துக்கு பாதிப்பு இல்லாமல் நிர்வாகத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் தென் மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்காக தென்மாநில இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், மாநிலங்களை பிரிப்பது தொடர்பாக 15 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், தென்தமிழகம் பிரிய வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க.....

தொலைபேசி மிரட்டல்களால் அச்சுறுத்தப்பட்ட ஜேம்ஸ் எல்டர், கொழும்பில் இருந்து வெளியேற்றம்

ஐ.நாவின் சிறுவர் நிதிய (யுனிசெப்) பேச்சாளர் ஜேம்ஸ் எல்டரை தமது நாட்டிலிருந்து வெளியேறுமாறு சிறிலங்கா அரசு திடீர் உத்தரவு பிறப்பித்து, அவர் இந்த மாதம் 7 ஆம் திகதிக்குள் வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நாளை திங்கட்கிழமை வரை சிறீலங்காவில் தங்கி இருக்க அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் எல்டருக்கு அடுத்தடுத்து விடுக்கப்பட்டுள்ள மர்ம தொலைபேசி மிரட்டல்களை அடுத்து, நேற்றைய தினமே கொழும்பில் இருந்து புறப்பட்டுவிட்டார் அவர். யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின், குறிப்பாக பெண்கள் சிறுவர்களின் நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு ஜேம்ஸ் எல்டர் தெரிவித்த கருத்ஹ்டுக்களை அடுத்தே அவரை நாட்டை விட்டு வெளியேறும் படி அரசு உத்தரவிட்டிருந்தது. எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக சர்வதேசத்திற்கு கருத்து தெரிவித்து வருவதாலேயே அவரை நாடுகடத்த தீர்மானித்ததாக அரசு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க....

Saturday, September 19, 2009

கருணாநிதி மீது உலகத்தமிழர்கள் அதிருப்தியென நெடுமாறன் கூறியதற்கு கலைஞர் கண்டனம்!

பழ.நெடுமாறன் உண்மைக்கு புறம்பான தகவல்களை தொடர்ந்து தெரிவித்துவருவதாகவும், தனக்கு முடிவு கட்ட முற்படுவதாகவும் தமிழக முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியிருக்கிறார்.ஈழத்தமிழர் பிரச்சினையில் முதலமைச்சர் கருணாநிதியின் செயற்பாடுகள் உலகத்தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக, அண்மையில் பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார்.

'அந்த செய்தி தொகுப்பில் இருந்து நெடுமாறன் கோஷ்ட்டியினரின் உள்நோக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏதோ எனக்கு ஒரு முடிவு கட்ட திட்டமிட்டு அந்த பழியை உலகத்தமிழர்கள் யார் மீதாவது போட்டுவிட்டு தாங்கள் தப்பித்துக்கொள்ள, iஇவர்கள் முன்கூட்டியே செய்யும் - தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான சாமர்த்தியமான பிரச்சாரம் இது என்றே நான் திட்டவட்டமாக கருத

தொடர்ந்து வாசிக்க...

அமைச்சர் ஒருவர் தலைமையில் கட்டாய வரிவசூலிப்பு..?



இலங்கை அரசின் அமைச்சர் ஒருவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஷமிளிரும் களினி - அபிவிருத்தி நிதியம் என்ற அமைப்பினால் பலவந்தமாக நிதி சேகரிக்கப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. களனி டயர் கூட்டுத்தாபனத்திற்கு பயணிக்கும் பாரஊர்த்திகள் மற்றும் இவ்வீதியில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு பயணிக்கும் வாகனங்கள் ஆகியவற்றிடமிருந்து பலவந்தமாக வரி அறவிடப்பட்டு வருவதாக வாகன சாரதிகள் தெரிவித்ததாக கொழும்பில் தகவல் வெளியாகியுள்ளன எனத் தெரியவருகிறது.


தொடர்ந்து வாசிக்க

என்னைக் கருணைக் கொலை செய்யுங்கள் - ராபட் பயஸ்

என்னைக் கருணைக் கொலை செய்யுங்கள் அல்லது உண்ணாநிலையில் உயிர்துறக்க இடையூறாக இருக்காதீர்கள் என வேலூர் சிறையிலுள்ள ஆயுள் கைதி கோரிக்கை வைத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனைச் சிறைக்கைதியான ராபட் பயஸ் என்பவரே இக்கோரிக்கையை, முதல்வர் கருணாநிதி, தலைமை நீதிபதி, மத்திய -மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க....

Thursday, September 17, 2009

பெரியாருடன் பிரபாகரனா? காங்கிரஸ் இளங்கோவன் கண்டனம்



தமிழகத்தில் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு வித்திட்ட தந்தை பெரியாரின் 131 நினைவு தினம் இன்று. இதனை முன்னிட்டு இன்று காலை சென்னையில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, மற்றம் திமுக பிரமுகர்கள், தந்தை பெரியாரின் சிலைக்கு மாலைசாத்தியும், மலரஞ்சலி செலுத்தியும், மரியாதை செலுத்தினர். இந் நிகழ்வில் முதல்வருட்ன் தமிழக நிதித்துறை அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டார்கள்.


தொடர்ந்து வாசிக்க

ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி பாஸ்கோ, இன்று இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம்

சிறீலங்காவுக்கான அதிகார பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் லைன் பாஸ்கோ, நேற்று கொழும்பை வந்தடைந்தார். இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை தொடர்பாக நேரடியாக கண்டறியவும், அங்கு மேற்கொளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக, நேரடியாக கண்டறியவும் இன்று வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு செல்லும் அவர், நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க...

Wednesday, September 16, 2009

50 ரூ Phone reload செய்ய 12 ரூ வரி - மஹிந்த அரசின் கொள்ளையடிப்பு - கபீர் ஹசீம்

மஹிந்த சிந்தனை, சிறிலங்காவினை கடன் பெறுவதில் உலகில் கின்னஸ் சாதனைக்கு கொண்டு செல்லப்போகிறதென, ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.ஒரு கிலோ பால் பக்கெட்டுக்கு 125 ரூபா வரி, ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 75 ரூ வரி, ஒரு கிலோ நெத்தலி கருவாட்டிற்கு 30 ரூ வரி, ஒரு டின் மீன் ஒன்றிற்கு 80 ரூ வரி, ஒரு கிலோ கடலைக்கு 30 ரூ வரி, என எல்லாவற்றிற்கும் சிறிலங்கா அரசு வரி அறவிடுகிறது. இவற்றையெல்லாம் என்ன செய்கிறது?


தொடர்ந்து வாசிக்க...

வன்னியில் யுத்தம், வவுனியாவில் முகாம், மீண்டுவந்த வாணியின் குரல்



சிறிலங்காவின் வட பகுதிக்கு, உறவினை பார்க்கச்சென்ற பிரித்தானிய குடியுரிமை கொண்ட, தமிழ்வாணி ஞானகுமார் சிறிலங்கா அரசு மேற்கொண்ட பாரிய இறுதி யுத்தத்தில் சிக்கி, வன்னி மக்களுடன் இடம்பெயர்ந்த வேளை, இடைத்தங்கல் முகாம்களில் தடுத்து வைக்கப்ப்பட்டிருந்தார். பிரித்தானிய அரசின் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் கடந்த 8 ஆம் திகதி, அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, பிரித்தானியா செல்ல அனுமதிக்கட்டார்.

தொடர்ந்து வாசிக்க

பாட்டு கேட்கலாம் வாங்க (ஒரு 30 நிமிடம் நம்ம கூட spend பண்ணுங்களேன்)


4tamilmedia வின் மற்றுமொரு பொழுது போக்கு படைப்பு இது. ஒரு 30 நிமிடம் நம்மகூட செலவழிச்சு, கேட்டு பாருங்களேன். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறோம்.

'பாட்டு கேட்கலாம் வாங்க' நிகழ்ச்சியை கேட்க இங்கு அழுத்தவும்

டேனி பொயலின் புதிய திரைப்படத்திற்கு இணையும் அமீர்கான், ஷாருக்கான்

ஆஷ்கார் விருதுகளை அள்ளிக்குவித்த 'ஸ்லம் டோக் மில்லியனர்' திரைப்படத்தின் இயக்குனர் 'டேனி பொயல்', தனது அடுத்த திரைப்படத்திற்காக அமீர் கான், மற்றும் ஷாருக்கானுடன் இணைந்துள்ளார் என தெரியவருகிறது.
'பொம்பே வெல்வெட்' எனப் பெயரிடப்பட்ட இத்திரைப்படத்திற்கு அமீர் கான் மற்றும், ஷாருக்கான் ஆகியோரை ஒன்றாக நடிக்க அணுகியிருக்கிறாராம் டேனி. இரு பொலிவூட் நட்சத்திரங்களும் தங்களுடைய சம்மதத்தினை தெரிவித்திருக்கிறார்களாம். அனில் கபூரினையும் ஷாருக்கானின் கதாபாத்திரத்திற்கு அனுகியிருந்தார்களாம். ஆனால் ஷாருக் நடிப்பது உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க...

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைத் தோற்கடித்தவர் அண்ணா - பிராணப் முகர்ஜி

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைத் , திமுக தனித்து நின்று தோற்கடித்து அதிர்ச்சி தரக் காரணமானவர் அண்ணா என நிதியமைச்சர் பிராணப் முகர்ஜி குறிப்பிட்டார். சென்னையில் நடந்த அறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில், கலந்த கொண்டு பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து வாசிக்க..

ஐ.நா பொதுக்கூட்டத்தில், சேனல் 4 வீடியோவை நிராகரித்து விசேட உரை

சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான வீடியோவினை அண்மையில் சேனல் 4 ஊடகம் வெளியிட்டு பெரும் அழுத்தத்தினை அரசிற்கு கொடுத்திருந்தது. இதன் பின்னர் நேற்று முன் தினம் ஐ.நாவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க. இதன் போது, பலரும் எதிர்பார்த்தது போன்றே, சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட வீடியோ தொடர்பாக விசேட உரை ஆற்றியுள்ளார் அவர்.

தொடர்ந்து வாசிக்க..

Tuesday, September 15, 2009

தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சியை மாற்றிட மக்களைச் சந்திப்போம் - ஜெயலலிதா



அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலர் செல்வி: ஜெயலலிதா அதிமுகவின் தொண்டர்களுக்கும் உறுப்பினர்களுக்கம் எழுதியுள்ள மடலில், தற்போது தமிழகத்தில் நடைபெறுவது ஹிட்லர் ஆட்சி எனவும், அதையகற்றி, தமிழகத்தில் எ‌ம்.‌ஜி.ஆ‌ரி‌ன் ஆ‌ட்‌சியை ‌மீ‌ண்டு‌ம் அம‌ர்‌த்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார் என தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


தொடர்ந்து வாசிக்க

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவர் பற்றீசியா புரூட்டினால், சிறிலங்கா அரசிற்கு ஆபத்து?

புலிகளின் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மீண்டும் இலங்கைக்கு எதிராக சதிவலையினை விரித்துள்ளன. இதற்கு உள்நாட்டு பிரதான அரசியல் கட்சிகள் சிலவும் உடந்தையாக உள்ளனவென தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிட்டுள்ளது. சனல் 4 வீடியோ காட்சியின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட சதியினை விட, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக வரவிருக்கும் பற்றீசியா புரூட்டீனால் ஏற்படப் போகும் ஆபத்துக்கள் பாரியளவாக இருக்கும்.

தேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடு நேற்று அதன் தலைமையகத்தில் இடம்பெற்ற போதே, பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீ



தொடர்ந்து வாசிக்க....

Monday, September 14, 2009

இந்தியர்களின் கறுப்புப் பணமெதுவும் இல்லை - கைவிரிக்கிறது சுவிஸ் வங்கிகள்



இந்தியர்களின் கறுப்புப் பணமா..? அப்படியெதுவும் எங்களக்குத் தெரியாது எனக் கைவிரிக்கின்றன சுவிஸ் வங்கிகள். சுமார் 70 லட்சம் கோடி இந்திய ரூபாய்கள், வரிஏய்ப்புப் பணமாக, சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை எனச் சுவிஸ் வங்கிகள் தெரிவித்திருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.


தொடரும் செய்திகள்

ஜீ.எஸ்.ரி வரி நிவாரணம் கிடைக்காவிட்டால், சரத் பொனசேக மீது குற்றம் சாட்ட ஜனாதிபதி திட்டம்?


ஐரோப்பிய ஒன்றியத்தினால், இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜிஎஸ்ரி வரி நிவாரணம் தொடர்ந்தும் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் சரத் பொன்சேகாவை ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சின் நிரந்தர செயலாளராக பணியமர்த்த ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பொன்சேகாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

ஜிஎஸ்ரி வரி நிவாரணம் கிடைக்காது போனால் அரசாங்கம் தனது இயலாமையை மூடிமறைத்து, அந்தப் பழியை சரத் பொன்சேகா மீது சுமத்த முயற்சித்து வருகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தொடர்ந்து வாசிக்க....

Sunday, September 13, 2009

வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது - ஜனாதிபதி ராஜபக்ச



இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ள முப்படை முகாம்கள் எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டாது என சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். உள்நாட்டு யுத்தம் முடிந்துள்ளமையால், தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களாகிய வடக்கு கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள முப்படையினரை, அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


தொடர்ந்து வாசிக்க

உலகத்தமிழர்களிடமும் கலந்தாலோசித்து தான் அரசியல் பிரவேசம் - விஜய்

நடிகர் விஜர் அரசியல் பிரவேசம் குறித்து, சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று மனம் திறந்துள்ளார்.கடந்த சில தினக்களாகவே எந்த பத்திரிகையை திறந்தாலும் எனது அரசியல் பிரவேசம் பற்றிய செய்தி தான் முதலில் நிற்கிறது. உண்மையை சொன்னால் நான் அந்தளவுக்கு பெரிய ஆள் கிடையாது.சினிமா தன எனக்கு முக்கியம். அரசியல் பிரவேசம் குறித்து முடிவேதும் எடுக்கவில்லை.
ராகுலை சந்தித்து நான் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை.

ராகுலை சந்தித்த போது அவர் என்னை வரவேற்ற விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நானும், காங்கிரஸும் இளைஞர்களை அணுகுவதில் ஒரே அணுகுமுறையை தான் வைத்துள்ளோம். அவரை டெல்லியில் சந்தித்த போது எனது திரைப்படங்கள், நான் செய்து வரும் மக்கள் பணிகளை பற்றித்தான் பேசினார். அரசியல் பற்றியும் பேசினோம். ஆனால் அதை இப்போது சொல்வது நாகரீகமாக இருக்காது.

தொடர்ந்து வாசிக்க....

Saturday, September 12, 2009

இனிக்கும் இலக்கியம் - பகுதி 3



இனிக்கும் இலக்கியத்தின் இந்தப் பகுதியில் இடம் பெறுவது படிக்காசுப் புலவரின் பாடல் ஒன்று. அந்தப் பாடலைச் சார்ந்த அருமையான திரையிசைப் பாடலுடன் இனிக்க வரும் இலக்கியத்தைக் கேட்க கீழேயுள்ள செயலியை அடுத்துங்கள், கேளுங்கள்.


தொடர்ந்து வாசிக்க

விஜய் அரசியலுக்கு வருவாரா..? நாளை தெரியலாம்.



விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற அன்மைக்காலப் பரபரப்புக் கேள்விக்கு நாளை விடை தெரிந்து விடுமெனத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. விஜய் அரசியிலில் ஈடுபடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் காங்கிரஸ் கட்சியில் சேருவாரா, அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா என்பது பற்றி நாளை பத்திரிகையாளர் மத்தியில் அறிவிக்கலாம் எனத் தெரியவருகிறது.
தொடர்ந்து வாசிக்க

சிறிலங்கா ஊடக அடக்குமுறைக்கு சென்னையில் கண்டனம்

சென்னையில் பத்திரிகையாளர்கள் இணைந்து, இலங்கை ஊடகவியலாளருக்கு ஆதரவாகக் கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு வழங்கப்ட்டுள்ள தண்டனையைக் கண்டித்தே இக் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ், சிறிலங்கா நீதிமன்றம் பத்திரிகையாளர் திசாநாயகத்திற்கு 20 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கியது.

சிறிலங்கா நீதிமன்றத்தின் இத் தீர்ப்பை கண்டித்து சென்னையில் உள்ள முக்கிய ஊடகவியலாளர்கள் இணைந்து கண்டனக் கூட்டம் நடத்தியுள்ளனர். சென்னையில் உள்ள தியாகராஐநகர் வெங்கட் நாராயண சாலையில் அமைந்துள்ள தெய்வநாயகம் பள்ளியில் இன்று சனிக்கிழமை காலை 10 முதல் 2 மணி வரை இக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பல் வேறு ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும், சுயாதீன ஊடகவியலாளர்களும், கலந்து கொண்டார்கள்.

தொடர்ந்து வாசிக்க....

Friday, September 11, 2009

கிரீஸ் பகனி முகாம்களுக்குள் கண்டுகொள்ளப்படாத அகதிகளின் பேரவலம்



சிறிலங்காவின் 3 இலட்சம் மக்கள் அடைபட்டிருக்கும் இடைத்தங்கல் முகாம்கள் எனப்படும் திறந்த வெளிச்சிறைச்சாலகள் பற்றி அலட்டிக்கொள்ளாமல் உலகம் ஒரு பக்கம் அமைதி காக்க, இன்னொரு பக்கம் கிரீஸ் நாட்டின் லெஸ்வோஸ் நகரில், பகனி எனும் தடுப்பு முகாமில் அடைபட்டிருக்கும் 160 மக்கள் பற்றி, இரகசியமாக வெளியிடப்பட்ட ஒரு வீடியோ தொகுப்பு, அலட்டிக்கொள்ளாமல் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில், பிடிபட்ட சுமார் 160 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள், 180 நாட்களுக்கு மேலாக, தனித்தனியான 200 சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட இரு அறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை விடுவிப்பது பற்றியோ, அல்லது மேலதிக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியோ கிரீஸ் அரசு இன்னமும் எந்தவிதமான அறிவித்தல்களையும் இவர்களுக்கு கூறவில்லை.

தொடர்ந்து வாசிக்க

ஹிட்லர், சதாம் ஹுசைன்,ஸ்டாலினுடன் ஒரு எயிட்ஸ் சர்ச்சை!

ஜேர்மனியில் எயிட்ஸ் நோயினை பற்றிய விழிப்புணர்வினை மக்களிடையே கொண்டு வரும் நோக்கில், ஒரு எயிட்ஸ் விழிப்புணர்வு முகவர் நிலையம், முன்னாள் ஜேர்மனிய சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் ஒரு இளம்பெண்ணுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை சித்தரிக்கும் முகமாக தயாரித்த விளம்பரம் ஒன்று கடந்த புதன்கிழமை இணையதளம் வழியே யூடியூப்பில் ஏற்றப்பட்டு, ஐரோப்பிய மக்களின் பரவலான எதிர்பை சம்பாதித்துக்கொண்டது.

இதனால் இவ்விளம்பரம் 'யூடியூப்' இணையத்தளத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த வாரம் ஜேர்மனிய தொலைக்காட்சிகளிலும், திரையரங்குகளிலும் இவ்விளம்பரத்தினை காண்பிக்கப்போவதாக குறித்த முகவர் நிலையம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க...