Pages

Tuesday, July 20, 2010

இந்தியா தவறவிட்ட மற்றுமொரு ரயில்!

'ஸ்பெயின் கிண்ணத்தை வென்றது - அக்டோபஸ் கணிப்பும் சரியானது' - ஐரோப்பிய நாடொன்றின் ரயில் பத்திரிகைகளில் கடந்த ஒரு மாதமாக முதற்பக்க செய்திகளாக வந்துகொண்டிருந்தவை.

இன்று அதே ரயில் பத்திரிகைகளின் முன்பக்க அட்டைப்படத்தில் மேம்பாலத்துக்கு குறுக்கே மோதுண்டு கிடக்கும் ரயில் பெட்டிகளும், சுற்றி நின்ற மக்கள் கூட்டமுமாக ஒரு படம் அச்சிடப்பட்டிருந்தது. 'இந்திய தேசத்து ரயில்கள்' என தலைப்பும் குத்திக்காட்டப்பட்டிருந்தது. காலை அலுவலக பயணத்துக்கு ரயிலையே அதிகம் உபயோகிக்கும் ஐரோப்பிய மக்களின் அடி மனதில், இந்திய தேசம் ஆழமாக பதிந்துவிட இன்னொரு மிகச்சிறந்த உதாரணத்தை இப்பத்திரிகைகள் தந்துள்ளது.

'50 உயிர்கள், அந்த இடத்திலேயே நசுங்கி செத்துள்ளது. 12 உயிர்கள் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. 92 ற்கு மேற்பட்ட உயிர்கள் மருத்துவமனையில் சாவதற்கு போராடிக் கொண்டிருக்கின்றது. இந்தியா தவறவிட்ட மற்றுமொரு ரயில்!

No comments:

Post a Comment