Thursday, July 26, 2012
Monday, June 14, 2010
தமன்னாவை தாக்கிய தொலைபேசி சுறா வலி !

தமன்னாவை மொத்த மீடியாவும் தூக்கி வைத்து கொண்டாடுவதில் ஒரு காரணம் இருகிறது. கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருந்தும் பிகு, பந்தா எதுவுமில்லாமல் பேட்டி என்று கேட்டவுடன் ஒகே சொல்கிற நாயகி மட்டுமல்ல. நாம் எதிர்பார்க்காமலேயே எந்த தயாக்கமும் இன்றி பதில் சொல்லக்கூடியவர். மொத்தத்தில் துணிச்சல் நாயகி. ஆனால் இந்த அதீத துணிச்சலால் முதல் முறையாக குட்டு வாங்கியிருக்கிறார். அதுவும் ஒரு கோலிவுட் விஐபியிடம்.
தொடர்ந்து வாசிக்க
Thursday, May 13, 2010
முத்துக்குமாரின் தியாகத்தை வீணாக்கி விட்டோம் - இயக்குனர் ராம் அறச் சீற்றம்
'கற்றது தமிழ்' திரைப்படம் வந்த போது யார் இதன் இயக்குனர் என பலரை கேட்க வைத்தவர் 'ராம்'.
அண்மைக்காலத்தில் இணைய வெளியில் வெளியான கட்டுரை ஒன்றின் மூலம், யாரிவர; எனப் பலரையும் மீளவும் கேட்க வைத்திருக்கிறார். முத்துக்குமாரின் தியாகத்தை வீணாக்கி விட்டோம் - இயக்குனர் ராம் அறச் சீற்றம்
Thursday, April 29, 2010
அரைகுறையாய் தாகம் தீர்க்கும் ரஜினி!
சென்னை கோடம்பாக்கத்தின் ஒரு பகுதியான ரங்கராஜபுரத்தில் இருக்கிறது ராகவேந்திரா திருமணமண்டம். ரஜினிக்கு சொந்தமான இந்த பிரமாண்ட மண்டபத்தில் நடுத்தட்டு குடும்பத்தை சேர்ந்த யாரும் திருமணம் நடத்திவிட முடியாது.
தொடர்ந்து வாசிக்க
Tuesday, April 6, 2010
ஆனந்தி இதழின் பூக்கூடை. (சிறு செய்திகளின் தொகுப்பு)
ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய பைத்தியக்காரத்தனம்!..
பfட்டா, கோல்டன் குளோப், ஒஷ்கார், என கடந்த வருடம் விருதுகளை குவித்த ஏ.ஆர்.ரஷ்மான், இசையுலகின் ஒஷ்கார் எனப்படும் கிரம்மி விருதுகளையும் இவ்வருடம் தொடர்ச்சியாக
ஆனந்தி இதழின் பூக்கூடை. (சிறு செய்திகளின் தொகுப்பு)
Saturday, March 20, 2010
அடங்காத ரீமிக்ஸ் தாகம், ஆர்ப்பரிக்கும் ரீமேக் மோகம்.
இந்த ஆக்கத்தின் தொடர்ச்சியை ஆனந்தி சஞ்சிகையின் இணைய பதிப்பில் 40 ம் பக்கத்தில் காணலாம்.
Thursday, March 11, 2010
2010 மார்ச் மாத ராசி பலன்கள்!
கணித்தவர்-பேராசிரியர். ஸ்ரீதரன், மதுரை- மேஷம் (அச்சுவினி, பரணி, கார்த்திகை-1ம் கால்) மேஷராசி அன்பர்களே! இது வரை செவ்வாய் கிரகத்தால் ஏற்பட்டு வந்த தடைகள், தடங்கல்கள், தாமதங்கள் மாறும். வியாழன் சுபவலிமை பெறுவதால் தொழில் , வியாபாரம் மற்றும் விவசாயத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம்.
அனைத்து ராசிகளுக்குமுரிய ராசிபலன்களை ஆனந்தி சஞ்சிகையில் ஆன்லைனில் பதிவு செய்து இலவசமாக படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
Monday, March 1, 2010
உன்னால் முடியும்..!
புலத்துத் தமிழனின் இன்றைய முக்கிய சமுகப்பிரச்சினை உறவுச் சிக்கல். உறவு என்பது மனித வாழ்வின் ஆணிவேர். அன்பு வெளிப்பாட்டின் இதயம். பண்பான வாழ்வின் முதற்படிமுறை. இந்த உறவு என்பது இன்று புலத்தில் பணவழி இணைப்பு என்னும் எண்ணம் பலரிடை பரந்து விட்டதால் உறவு அன்பால் பண்பால் வளர்க்கப்படாது.
பணத்தால் பதவியால் புகழால் நிலைநிறுத்தப்படுகிற பரிதாப நிலை நடைமுறை வாழ்வாகிறது. பணத்திற்காக உழைக்க வேண்டும். பதவியைக் காப்பாற்றுவதற்காகப் படாதபாடுபட வேண்டும். பணத்தாலும் பதவியாலும் வரும் புகழைப் பேசி உறவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணங்களில் இயங்கும் தமிழர்கள் பலர்.இந்த ஆக்கம் ஆனந்தி மாத சஞ்சிகைக்காக எழுதப்பட்டது. அதனை முழுமையாக வாசிக்க www.aananthi.com இல் பதிவு செய்து ஆன்லைனில் தொடருங்கள்.
Monday, February 1, 2010
"ஆனந்தி" அறிமுகம்
"ஆனந்தி"
4தமிழ்மீடியா குழுமத்தின் மற்றுமொரு பரிணாமம்.
2008 ஜனவரி மாதம் இந்தியா, மலேசியா, இலங்கை, எனத் தேசங்கள் கடந்த தமிழ் நேசம் கொண்ட நண்பர்களின் எண்ணத்தில் கருவாகி, உலகத் தமிழர்களின் உறவுத் தளமாக உருப்பெற்றதுதான் 4தமிழ்மீடியா.
முத்தமிழின் சிறப்புக்களோடிணைந்து கணினித் தமிழ் எனும் நான்காம் தமிழால் உருப்பெறுவதால் நான்காம் தமிழ் ஊடகம் என்பதை சுட்டும் வகையிலும், சொல்வதற்கும், இணையப் பரம்பலுக்கு, ஏற்பாகவும், 4தமிழ்மீடியா எனப் பெயருடன் எழுந்த இக் குழுமம் படிப் படியாகத் செயற் திட்டங்களை வகுத்து, 2008 ஆவணிமாதம் (ஆகஸ்ட்) 14ந் திகதி, 4தமிழ்மீடியா தனது அதிகாரபூர்வமான சேவையை ஆரம்பித்தது. ஆரம்பித்த நாள் முதல் படிப்படியாக தன் நோக்கில் தடம் பதித்து வருகின்றது.
இணையத்தில் உள்ள புதிய தொழில் நுட்பங்களினடிப்படையில் விரிவான விரைவான நம்பிக்கையான செய்திகளைத் தொகுத்துத் தருவதுடன், பல்வேறு துறைசார் படைப்புக்களைத் தருவதும், புதிய தொழில்நுட்பம் சார்ந்த இணைய முயற்சிகளை மேற்கொள்வதும் , தொடரும் இந்த இணையப் பயணத்தில் எமது இலக்குகளாகும்.
4தமிழ்மீடியா இணையப்பணிகள் திட்டமிடும் போதே அதன் மற்றுமொரு செயல் திட்டமாக அச்சுப்பதிப்பாக சஞ்சிகை ஒன்றை கொண்டு வருவது குறித்தும் தீர்மானித்திருந்தோம். அதன்படி கடந்த மே மாதம் முதல் வெளிவருவதாக இருந்த சஞ்சிகை, ஈழத்தில் நிலவிய அசாதாரன நிலைகள் காரணமாக, இடைநிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது அம் முயற்சியின் தொடர்ச்சியாக, பெப்ரவரி 2010 இல் இருந்து “ஆனந்தி” எனும் மாதாந்த சஞ்சிகையை வெளியிடத்தொடங்கியுள்ளோம். இச்சஞ்சிகை வெளியீட்டின் முதற்கட்டமாக சுவிஸ் நாட்டிலும், தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் வெளிவரும் வகையில் பரவலாக்கப்பட இருக்கிறது.
இணைய பயன்பாட்டிற்கு அப்பால் உள்ள தமிழ் மக்களிடத்தில் எமது கலை கலாச்சாரப் பரிமாற்றம், புலம் பெயர் சமூக பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், இளைய தலைமுறையினரின் முயற்சிகளை ஊக்கப்படுத்தல், புதிய தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களையும், இணையம் பற்றிய பரிச்சயத்தினையும், தமிழில் அறியத்தருதல், குறைந்து போயிருக்க கூடிய வாசிப்பு பழக்கத்தினை ஊக்கப்படுத்தல் என்பன இச்சஞ்சிகை வெளியிடுவதன் பிரதான நோக்கங்கள் ஆகும்.
இச் சஞ்சிகைப் பணியில் உலகெங்குமிருந்து, இணைந்து பணியாற்ற விரும்பும் உள்ளங்கள் அனைவரையும் விரும்பி அழைக்கின்றோம். உங்கள் பணி, விளம்பர முகவராக, வினியோகிஸ்தராக, செய்தியாளராக, படைப்பாளியாக, எந்த வகையிலும் அமையலாம். உங்கள் உழைப்புக்கும், முயற்சிக்கும் உரிய பயனும், பணமும் கிடைக்கும்.
உங்கள் முழுமையான சுய விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டிய மின் அஞ்சல் முகவரி:
4aananthi@gmail.com This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
இனி; ஆனந்தியைக் காண,