Thursday, May 22, 2014

வாசகர்கள் அல்ல வரங்கள் அது வாய்திருப்பதே எங்களது பலம்!

ஒரு செய்தியில் தவறு. பிரசுரமாகிய அடுத்த சில நிமிடங்களுக்குள் அந்தத் தவறை, அழகாகச் சுட்டிக்காட்டும் அன்பான வாசகர்கள்
கிடைப்பதென்பது ஊடகப் பரப்பில் உண்மையான வரம்.
அது எங்களுக்கு வாய்திருப்பதே எங்களது பலம். ஆரம்பித்து ஆறு ஆண்டுகளைத் தொட்டுவிட விளைகின்ற இந்த வேளையில், இவ்வாறான வாசக உறவு தரும் உற்சாகம் இன்னும் பல செய்ய வேண்டும் எனும் பேராவைப் பிரசவிக்கிறது.
அந்த ஆசையின் வெளிப்பாடு நாளும் புது விடயங்களை, நயம்படத் தேடி, நான்காம் தமிழில் தருகிறது 4தமிழ்மீடியா.
தமிழில் இன்னும் பல செய்யவேண்டுமெனும் எண்ணம் வலுப்பெற, திண்ணம் கொண்டு திடமாக உழைக்கின்றோம். இந்த உழைப்பின் பலன் உங்களுக்கானது. உடனிருங்கள். சமூக வலைத்தளங்களின் வழி எங்கள் தளத்துக்கான உங்கள் விருப்புக்களைத் தந்து, முயற்சிகளின் பலனை முழுமையாக்கி உதவுங்கள்..
என்றும் மாறா இனிய அன்புடன்
4Tamilmedia Team
https://www.facebook.com/4tamilmediadotcom
http://ow.ly/x8gdA

No comments: