Monday, April 6, 2009

இந்தியனெனும் பெருமை கொல், தமிழனாய் பெருமை கொள்




தமிழத்தின் தாயுறவே! புலத்தில் உறவுகளையும், புலம் பெயர் தெசத்தில் வாழ்வினையும் தொலைத்து விட்டு நிற்கும் புலம் பெய தேசத்துறவொன்றின் இந்த மடலுக்காய் ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கு, ஒன்றித்து வாசி, உடன் செயற்படு. உன் உடன் பிறப்பெனும் உரிமையில் கேட்கின்றேன்.

ஈழத்தின் இறுதிக்கட்டப் போரினை இன்று முடித்து விடுவோம், நாளை முடித்து விடுவோம் என்று இறுமாந்திருந்த சிங்களத்தின் சிந்தனைகளை , சீறியெழுந்த போராளிகள் சிதறடித்தது கண்டு கலங்கிற்று சிங்களச் சிறிலங்கா. ஈந்த நாட்களுக்குள் முடித்து விடும் என்று நம்பி, இந்தியத் தேர்தலுக்கும்ட நாள் குறித்தாகி விட்ட நிலையில், இன்னமும் போர் முடியவில்லை என்பதும், கேள்வி மேல் கேள்வி கேட்கும் சர்வ தேசங்களுக்கு இந்தியாவைக் கேளுங்கள் என சிங்களம் கைகாட்டுவதும் மத்திய அரசுக்கு மகா தலையிடியாயிற்று. இந்நிலையில் எப்பாடு பட்டாயினும், இன்னும் ஒரு வாரத்தில் போரை முடித்துவிட வேண்டும் என விரும்பிய இரு நாடும், நாகரீகம் தொலைத்து நச்சுக் குண்களை நம் மக்கள் மீது பாவிக்கத் தொடங்கிவிட்டன. நரபலி எடுக்கத் தொடங்கிவிட்டன. தொடர்ந்து வாசிக்க

2 comments:

Anonymous said...

வருந்துகின்றேன்

Anonymous said...

:(