Monday, October 19, 2009

கடல் வழியே தன்னந்தனியே உலகை சுற்றி வரத்தொடங்கியுள்ள 16 வயதுப்பெண்!

ஒரு சிறிய படகில், தன்னந்தனியாக உலகை சுற்றி வரவேண்டும்!'
இப்படி ஒரு ஆசை வந்தால் என்ன செய்வீர்கள்?

கற்பனை செய்து பார்த்து விட்டு, 'நல்லா இருக்கே' என்று சொல்லுவோம்!

ஆனால் நிஜமாகவே அப்படி செய்து பார்ப்போம் என புறப்பட்டுவிட்டார் அவுஸ்த்திரேலிய குட்டிப்பெண் ஜெஸிகா வட்சன்! 11 வயதில் இருந்து துரத்திய கனவு, விடா முயற்சி, இன்று அவருக்கு அதனை நனவாக்கத்தூண்டியுள்ளது.

தொடர்ச்சியாக கடல் வழியே சுமார் 230 நாட்களுக்கு, 23,000 மைல்கள் தூரத்தினை, கடந்து உலகை சுற்றி வரப்போகிறார்.
தனது 15வது வயதிலேயே இது பற்றிய அறிவிப்பினை விடுத்திருந்த ஜெசிகா குயின்ஸ்லாண்ட் பாடசாலை மாணவி ஆவார்!.

தொடர்ந்து வாசிக்க...

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் பெண்ணே