Wednesday, April 1, 2009

திருமா செய்தது சரியா..?


விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன், ஈழத்தமிழர்பிரச்சனையில் தீவிரமாகச் செயற்பட்டவர். விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை மிகுதியாக நேசிப்பவர். ஆயினும் இப்போது திமுக காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளார். இது ஈழவிடுதலை ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியைத் தோற்றுவித்திருக்கிறது.

இந்நிலையில் தொல். திருமாவளவனின் இந்தப் பேட்டி அவரது சுயநிலையை ஒரளவுக்கு விளக்குவதாக இருக்கிறது.ஒடுக்கபட்ட ஒரு சமூகத்தின் தலைமைப்பொறுப்பிலிருப்பவரின் தொலை நோக்குப் பார்வையைத் துலக்குவதாகவும் இருக்கிறது. திருமாவுக்கு என்னாச்சு என்னும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இருக்கிறது. திருமாவை போற்றுபவர்கள் தூற்றுபவர்கள் எவராயினும் அவசியம் பார்க்க வேண்டிய செவ்வி இது.

ஊடகவியலாளர் சுதாங்கனின் கேள்விகளும், திருமாவின் பதில்களும் மிக நேர்த்தியாக வருகிறது. கீழேயுள்ள இணைப்புக்களில் தொடர்ச்சியாகக் காணலாம்.

இணைப்புக்குச் செல்ல முன் கீழேயுள்ள குறிப்பினையும் வாசித்துச் செல்லுங்களேன்.


thamilbest.com இணையத்தளம், இனிவரும் காலங்களில், 4tamilmedia.com இணையத்தளத்துடன் இணைந்து, புதிய மேம்படுத்தல்களுடன் இனிய சேவையினை வழங்கவுள்ளதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். தயவு செய்து உறுப்பினர்கள் அனைவரும் மீளவும் உங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறும் வேண்டுகின்றோம்.

மேலும் உங்கள் வலைப்பதிவிலிருந்து வாக்களிக்கும் வசதியும் புதிதாக ஏற்படுத்தப்ட்டிருக்கிறது என்பதையும் அறியத்தருகின்றோம். அதை செயற்படுத்த கீழ் உள்ள நிரலை blogger.com இல் layout - edit HTML சென்று Expand Widget Templates செக் பாக்ஸ்-ஐ தேர்வு செய்து இன் பின்னால் இணையுங்கள். அதன் பின் நீங்கள் குறிப்பிட்ட பதிவை திறந்து அதை thamilbest.com இல் இணைக்கலாம் மற்றும் வாக்களிக்கலாம்.

No comments: