1987ம் ஆண்டு சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், இந்திப்பிரதமர் ராஜீவ்காந்திக்கு வழங்கப்பட்ட இராணுவ அணிவகுப்பில் வைத்து , விஜேமுனி எனும் சிங்கள இராணுவச் சிப்பாய் துப்பாக்கிக் கட்டையால் தாக்குகின்றார்.
கைது செய்யபபட்ட அவர் வழக்கில், சூரிய ஒளித் தாக்கத்தினால் ஏற்பட்ட மனப்பிறழ்வு காரணமாக தாக்கினார் எனக் காரணம் கட்டப்பட்டு பின்னர் அவர் விடுதலை செய்யப்படுகின்றார்.இந்த விடுதலைக்கான நீதி, அந்தத் தாக்குதலை நிகழ்த்திய விஜேமுனி மனநிலை பிறழ்ந்தவராக இருந்தார் என்பதே. ஒரு நாட்டின் பிரதமரைத் தாக்கிய வழக்கில் இந்த நீதியின் அடிப்படையில் தாக்கிய நபர் விடுவிக்கப்பட்ட நாட்டில்தான், பலபேர் முன்னிலையில் பொது இடமொன்றில் மனப்பிறழ்வு அடைந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார்தொடர்ந்து வாசிக்க

ஆஸ்திரேலியக் கப்பலில், இந்தோனேஷியத் துறைமுகத்தில் உள்ள 78 இலங்கையர்களையும் இறக்குவதற்குப் பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லையென இந்தோனேஷியா தெரிவித்துள்ளது.
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்ததாக, சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீதும், இராணுவத்தினர் மீதும் தமிழக தமிழின உணர்வாளர்கள் முதற்கொண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வரை குற்றம் சுமத்தியுள்ள வேளையில்,
தமிழக முதல்வர் கருணாநிதியினால் அறிவிக்கப்பட்ட உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, அடுத்த வருடம் கோவையில் நடைபெறவுள்ள நிலையில், இம்மாநாட்டிற்கு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து, தமிழர் படைப்பாளிகள் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய, அவுஸ்த்திரேலிய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில், 99 ரன்களால் வெற்றி பெற்று, சரியான பதிலடியினை கொடுத்துள்ளது இந்தியா!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்வதற்கு பயன்படுத்திய ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து இந்தியா புலனாய்வு பிரிவான றோவினால் தற்கொலைதாரிகளுக்கு வழங்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவுக்கு நெருக்கிய வட்டாரங்களிலிருந்தே இத் தகவல் கசிய விடப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. 





பிரதமர் மன்மோகன் சிங்கினையும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியினையும் சந்தித்திருந்த, இலங்கை சென்று வந்த தமிழக நாடாளுமன்றக்குழுவில் தொல்.திருமாவளவன் இடம்பெறாதது, தி.மு.க, காங்கிரஸில் இருந்து திருமா புறக்கணிப்புக்கான ஆரம்பமாக அமைந்துள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையே இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற கால கட்டத்தில் பெருமளவான பொதுமகக்ள் கொல்லப்பட்டதாகவும், யுத்தக்குற்றச்செயல்கள் இடம்பெற்றதாகவும், மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்கவும் இதனை ஆமோதித்திருந்தது. எனினும், சிறிலங்கா அரசு திட்டவட்டமாக மறுத்ததுடன், இது ஒரு தவறான கருத்தென கூறியது. இந்நிலையில், போர்க்குற்றத்திற்கான ஆதாரங்கள், தகவல்கள் உள்ளடக்கியதாக, அறிக்கை ஒன்றினை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ளது.


(

கனடாவின் வன்கூவர் தீவுக் கடலில் படகுடன் பிடிபட்ட 76 இலங்கைத் தமிழர்களை தொடர்ச்சியான தடுப்புக் காவலில் வைக்குமாறு கனடிய குடிவரவு மறுமதிப்பீட்டு சபை உறுப்பினர் லியான் கிங் உத்தரவிட்டுள்ளார். குடியேற்றவாசிகள் அங்கு வந்து சேர்ந்த விதம் பற்றிய விவரங்கள் தெளிவற்றவையாக இருப்பதால் அவர்களைப் பற்றிய சோதனையை பூர்த்தி செய்ய நேரம் நேரம் போதவில்லை என்று தெரிவித்து கனடிய குடிவரவு அமைச்சரின் பிரதிநிதி ஒருவர் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து இந்த தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா , ஹரியானா மற்றும் அருணாசல பிரசேதத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. மகாராஷ்டிரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. தெலுங்கு பாஜக-சிவசேனா கூட்டணிக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்தடுத்து 3 சட்டமன்றத் தேர்தல்களில் இந்தக் கூட்டணி தோல்வி அடைந்துள்ளது.
இந்தோனேஷிய துறைகத்தை அடைந்துள்ள, புகலிடம் கோரும் இலங்கைத் தமிழர்கள் 78 பேரை அந்நாட்டில் தற்காலிகமாக தங்கவைப்பது தொடர்பான உடன்படிக்கை ஒன்றில் அவுஸ்திரேலியாவும் இந்தோனேஷியாவும் கைச்சாத்திட்டுள்ளதாக ஏ.எப்.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

, தன்னந்தனியாக உலகை சுற்றி வரவேண்டும்!'

உலகப்பிரபல்யமான கெலான் நிறுவனத்தின் உரிமையாளரும், உலக செல்வந்தர் வரிசையில் 559 ம் இடத்தை வகிப்பவருமான அமெரிக்காவை சேர்ந்த தமிழர் வர்த்தகர் ராஜ் ராஜரட்ணம் நேற்றைய தினம் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பங்குச்சந்தை மற்றும் நிதிச்சந்தை கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடியான முறையில் இலாபமீட்டியதாகவும், 2006-07 காலப்பகுதியில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை